• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பெரம்பலூரில் வாகனப் பேரணியில் திமுக தாக்கியதில் சுயேட்சை வேட்பாளர் காயம்

ByT.Vasanthkumar

Apr 17, 2024

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் தமிழ்நாடு நாயுடு கூட்டமைப்பின் சார்பாக சுயேச்சை வேட்பாளராக ரெங்கராஜ் என்பவர் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் இறுதி கட்ட வாகன பேரணி பழைய பேருந்து நிலையப்பகுதியில் நடைபெற்றது. இதில் கப்பல் சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் ரெங்கராஜன் வாகன பேரணியில் முன்னே சென்ற பொழுது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில் திமுக, சுயேட்சை வேட்பாளர் ரெங்கராஜ் உட்பட 4 பேரை தாக்கினர். இதில் காயமடைந்த நான்கு பேரும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சுயேட்சை வேட்பாளர் ரங்கராஜன் ஆதரவாளர்கள் புகார் அளிக்கப்பட்டுள்ளது.