• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

புழல் ஏரியில் இருந்த உபரிநீர் திறப்பு அதிகரிப்பு – கரையோர மக்களுக்கு எச்சரிக்கை…!

சென்னை புழல் ஏரியில் இருந்து 500 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில், வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே வீட்டு விட்டு மழை பெய்து வருகின்றது.
இந்நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது உள்ளதால் சென்னையில் நள்ளிரவு முதல் தொடர்ந்து கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் சென்னையின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ள பல்வேறு ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பி வருகிறது. அந்த வகையில் கனமழையால் புழல் ஏரிக்கு நீர்வரத்து 1000 கனஅடியாக அதிகரித்து உள்ளது. இதனால் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு100 கனஅடியில் இருந்து 500 கன அடியாக அதிகரிக்க நீர்வளத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்பட உள்ளதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.