ஹாங்காங்கில் எலிகளுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டதை அடுத்து எலிகளை கொல்ல அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா எனும் கொடிய பெருந்தொற்று கடந்த இரண்டு வருடங்களாக உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில் தற்போது ஒமைக்ரான் எனும் உருமாறிய கொரோனா வைரஸ் மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த கொரோனா மனித குலத்திற்கும் மட்டுமில்லாமல் நாய், பூனை, சிங்கம் என விலங்களுக்கும் அச்சுற்றுத்தலாக மாறியுள்ளது. குறிப்பாக வன உயிரியல் பூங்காவில் இருக்கும் சிங்கம், புலி, குரங்கு போன்ற விலங்குகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஊழியர்கள் மூலம் விலங்குகளுக்கு பரவியிருக்கலாம் என கூறப்படுகிறது. இதனிடையே அண்மையில் பெல்ஜியம் நாட்டிலுள்ள ஆண்ட்வெர்ப் உயிரியல் பூங்காவில் இரண்டு நீர் யானைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ஹாங்காங்கில் ஹாம்ஸ்டர் எனப்படும் எலிகள் மத்தியில் கொரோனா பரவி வருவது அனைவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அங்கு இருக்கும் ஹாம்ஸ்டர் எலி வளர்ப்பு மையத்தில் தான் முதலில் ஒரு எலிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு உள்ள வெள்ளை எலிகளை சோதனை செய்ததில் 11 வெள்ளை எலிகளுக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அனைத்து எலிகளுக்கும் உருமாறிய டெல்டா கொரோனா தொற்று இருந்ததும் ஆய்வில் கண்டறியப்பட்டது. அந்தக் கூடத்தில் 2,000 வெள்ளை எலிகள் இருந்துள்ளன. இந்த மையத்தின் உரிமையாளருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இம்மையத்தில் எலிகளை மக்களும் விலைக்கு வாங்கிச் செல்வார்கள். இதனால் வாங்கிச் சென்ற மக்களுக்கும் கொரோனா பரவியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஆகவே எலிகளிடம் இருந்து மீண்டும் புதிய கொரோனா அலை தோன்ற வாய்ப்புள்ளதால் ஹாம்ஸ்டர் எலிகளை கொலை செய்ய ஹாங்காங் அரசு உத்தவிட்டுள்ளது. மேலும் அந்த மையத்திலிருந்து எலிகளை வாங்கிச் சென்ற வாடிக்கையாளர்களை கண்டறியும் பணியில் சுகாதாரத் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதுக்குறித்து ஹாங்காங் சுகாதார அமைச்சர் சோபிடா சான் கூறும்போது, இந்த எலிகள் மூலம் மனிதர்களுக்கு கொரோனா பரவுகிறதா என்று இதுவரை அறிவியல் பூர்வமாக உறுதி செய்யவில்லை.இருப்பினும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதற்காகவே எலிகளைக் கொல்ல உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் ஹாங்காங் மக்களையும் அண்டையில் இருக்கும் சீன மக்களையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.
- போக்சோ தண்டனையில் விடுதலையானவர் மீண்டும் போக்சோ சட்டத்தில் கைதுஜெயங்கொண்டம் அருகே போக்சோ சட்டத்தில் ஆயுள் தண்டனை பெற்று விடுதலையானவர் மீண்டும் போக்சோ சட்டத்தில் கைது […]
- கழுத்து கருமை நீங்க:சிறிதளவு ரோஸ்வாட்டர், சிறிதளவு வெங்காயச் சாறு, இரண்டு சொட்டு ஆலிவ் ஆயில் மற்றும் பயத்தமாவு கலந்து […]
- டென்மார்க்கில் 25 வயதிற்குள் திருமணம் ஆகவில்லையென்றால் இதுதான் சம்பிரதாயமாம்…இந்த உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு பழக்க வழக்கங்கள் மற்றும் கலாச்சாரங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன. […]
- முளைகட்டிய கோதுமை இனிப்புப் புட்டு:தேவையானவை:கோதுமை – ஒரு கப் நாட்டுச் சர்க்கரை – தேவையான அளவு நெய் – சிறிதளவு […]
- கலைஞர் கருணாநிதி திரு உருவ சிலை திறக்கப்படும் நாள் அனைவருக்கும் தித்திப்பான நாள்… ஸ்டாலின் நெகிழ்ச்சிசென்னை ஓமந்தூரார் தோட்ட அலுவலகத்தில் நாளை மாலை 5.30 மணிக்கு நடைபெறும் விழாவில் கருணாநிதி சிலையை […]
- தமிழ் மொழி நிலையானது. தமிழ் கலாச்சாரம் உலகளாவியது- மோடி பெருமிதம்பொங்கல், புத்தாண்டு காலங்கள் மிகுந்த ஆர்வம் நிறைந்தவை தமிழ் மொழி நிலையானது,அதன் கலாச்சாரம் உலகளாவியது என […]
- ரூ.31500 கோடியில் திட்டங்கள்- பிரதமர் துவக்கி வைத்தார்தமிழகத்தில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், நிறைவுற்ற பணிகளை தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கவும் பிரதமர் […]
- இதுதான் திராவிட மாடல் -மோடியின் முன்பு ஸ்டாலின் பேச்சுபல்வேறு திட்டங்களை துவக்கிவைக்க பிரதமர் மோடி தமிழக வந்துள்ளார்.இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் திராவிடமாடல் குறித்த […]
- சிந்தனைத் துளிகள்• வேத புத்தகங்களைப் படித்தால் மட்டும் போதாது.அதன்படி ஒட்டி ஒழுகுவதன் மூலமேவேதாந்தம் காட்டும் பாதையை அடையலாம். […]
- பொது அறிவு வினா விடைகள்1.குரோனா நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது?சுவீடன்2.உலக மக்கள் தொகை தினம் என்று கொண்டாடப்படுகிறது?ஜூலை 113.உலக […]
- குறள் 215:ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்பேரறி வாளன் திரு.பொருள் (மு.வ):ஒப்புரவினால் உலகம் வாழுமாறு விரும்பும் பேரறிவாளியின் செல்வம், […]
- தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி…ஹைதராபாத்திலிருந்து தனி விமானம் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்தார். அவரை அமைச்சர் துரைமுருகன், […]
- வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ.35.000 சம்பளத்தில் 26 காலிப்பணியிடங்கள் ..தென்னிந்திய பல மாநில விவசாய கூட்டுறவு சங்கம் (SIMCO) வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் […]
- சென்னைக்கு ஒரு நாள் பயணம்… நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு…பிரதமர் மோடி இன்று ஒரு நாள் பயணமாக சென்னை வருகிறார். சென்னையில் உள்ள நேரு உள் […]
- ஸ்மார்ட்போன் டேட்டா பயன்பாட்டில் இந்தியா முதலிடத்தில் உள்ளது- பிரதமர் மோடி பெருமிதம்உலகின் அளவில் ஸ்மார்ட் போன் டேட்டா பயன்பாட்டில்இந்தியா முதலிடத்தில் உள்ளது- பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.ஐதராபாத்தில் […]