• Fri. Apr 26th, 2024

இந்து மதம் என்றால் நக்கலாக போய்விட்டதா? ஹெச்.ராஜா காட்டாம்

Byமதி

Nov 16, 2021

பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், சென்னை மட்டுமின்றி டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர், கன்னியாகுமரி மாவட்டங்களும் மழை வெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. தமிழக முதல்வர் ஸ்டாலின் மேயராக இருந்தபோது சென்னையை சிங்காரச் சென்னையாக மாற்றுவேன் என கூறினார். ஆனால் தற்போது சிங்க் சென்னையாக உள்ளது.

கருணாநிதி காலத்தில் கட்டப்பட்ட வள்ளுவர் கோட்டம் நீர் நிலையை முடி அதன் மீது கட்டப்பட்டது. சட்டத்துக்கும், நியமங்களுக்கும் இங்கு மரியாதை கிடையாது. சென்னையில் மழையால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியவர்களுக்கு தலா 5 ஆயிரம் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும்.

டெல்டா மாவட்டங்கள், கடலூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து எந்த ஒரு வேலையும் நடைபெறவில்லை. கோவிலில் தங்கம் எடுக்கின்ற வேலையை மட்டும் செய்தது. அது நீதிமன்ற உத்தரவுப்படி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திமுக அரசு கோயிலில் கொள்ளை அடிக்கக்கூடாது. உண்டியல் நிரம்புவதை பார்த்தால் அள்ளிக்கொண்டு போ; கோயில் பூஜையில் தலையிடக்கூடாது என மக்கள் பேச ஆரம்பித்துள்ளனர்.

கோவில் விஷயங்களில் தலையிடுவதற்கு அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. கோயில் விஷயத்தில் அத்துமீறி செயல்பட்டால் ஒவ்வொரு அதிகாரிகளையும் பொறுக்கி எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென நிர்பந்தம் செய்ய என்னால் முடியும். இதற்காக என் மீது தமிழ்நாடு முழுவதும் எத்தனை பொய் வழக்குகள் வேண்டுமானாலும் போடட்டும்; அதனை சந்திக்க தயார்.

ஜெய்பீம் படத்தை உண்மை சம்பவம் என்று கூறுகிறார்கள். ஆனால் அந்தோணிசாமி என்ற பெயரை மட்டும் குருமூர்த்தியாக மாற்றியிகிறார்கள். அந்த இடத்தில் எந்த காலண்டரும் இருக்கக் கூடாது. காலண்டர் வைத்ததாக வேண்டுமென்றால் இயேசுநாதர் காலண்டரை வைக்க வேண்டும். மகாலட்சுமி காலண்டரை ஏன் வைத்தார்கள்? இந்து மதம் என்றால் நக்கலாக போய்விட்டதா?

நடிகர் சூர்யாவின் மனைவி ஜோதிகா இந்து மக்கள் கோவிலுக்கு போவதை இழிவாக பேசியுள்ளார். நாகூர் தர்காவை பற்றி அவர் பேசி இருக்கலாம்; வேளாங்கண்ணிக்கு போக வேண்டாம் என்று சொல்லியிருக்கலாம்; ஆனால் அவர்கள் சொல்லவில்லை; ஏனென்றால் அது அவர்களின் மதம்.

ஜெய்பீம் படம் வன்னியர் குல சமுதாயத்துக்கும், பட்டியல் சமுதாயத்துக்கும் இடையே சண்டைகளை மூட்டி, அதன் மூலம் மதமாற்றம் செய்யலாம் என்ற முக்கிய நோக்கத்தோடு எடுக்கப்பட்டது என்று பகிரங்கமாக குற்றம்சாட்டுகிறேன் என்று ஹெச்.ராஜா காட்டாமாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *