தமிழக அரசின் சார்பில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெறுகிறது. இம் மாநாட்டினை தமிழக முதல்வர் மு .க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். சிறப்பு விருந்தினராக மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஸ் கோயல் கலந்து கொள்கிறார்.
அதனைத் தொடர்ந்து காணொளி காட்சி மூலம் மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் நடைபெறும் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மதுரை சிறு, குறுந்தொழில் கூட்டமைப்பு சார்பில் 200 இளம் தொழில் முனைவோர் கலந்து கொண்டனர்.
சென்னையில் முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் உலகத் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டினை காணொளி காட்சி மூலம் மதுரை தொழில் முனைவோர்கள் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.