• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

காய்கறி அங்காடி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா.,

ByM.JEEVANANTHAM

Jun 13, 2025

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட திரு.வி.க. காய்கறி மார்கட் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த காய்கறி அங்காடி மிகவும் சேதமடைந்துள்ளது.

இதை அடுத்து இன்று இந்த காய்கறி மார்க்கெட் புதியதாக கட்ட ரூ 1 கோடியே 90 லட்சத்தில் கட்டுவதற்காக நகர மன்ற தலைவர் குண்டாமணி (எ ) செல்வராஜ் என்பவரால் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த அடிக்கல் நாட்டு விழாவில் நகர மன்ற துணை தலைவர் S.S.குமார்,நகர் மன்ற உறுப்பினர்கள் காந்தி,Er.ரமேஷ் சிட்டி செந்தில் மற்றும் காய்கறி மார்க்கெட்டில் கடை வைத்துள்ள உரிமையாளர்கள் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர்.