மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேபாப்பட்டியில் பி.கே மூக்கையாத்தேவரின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் ஆர்பி உதயகுமாரையை அமமுகவினர் விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம்,உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி கிராமத்தில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.கே மூக்கையாத்தேவரின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் ,பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் உசிலம்பட்டியில், மூக்கையாத்தேருக்கு வெண்கலசிலை வைத்தது எடப்பாடி என பேசினார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமமுக நிர்வாகி கோசமிட்டார். மேடையிலிருந்து இறங்கு பாதியிலேயே பேச்சை முடித்து கொண்டு கிளம்பினார்.