• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பட்டாசு ஆலையில் வெடி விபத்து

ByN.Ravi

May 11, 2024

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே, நாரணாபுரம் புதூரில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. பட்டாசு தயாரிப்பதற்கான ரசாயன மூலப்பொருள் வைக்கப்
பட்டிருந்த அறையில், ஏற்பட்ட வெடி விபத்தில் 3 அறைகள் தரைமட்டமாகின.
காலை நேரத்தில் விபத்து ஏற்பட்ட நிலையில், தொழிலாளர்கள் யாரும் பணிக்கு வராததால், உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில், இந்த மாதத்தில் மட்டும் 5-வது முறையாகப் பட்டாசு ஆலையில் வெடி விபத்து நிகழ்ந்துள்ளது.
கடந்த சில நாள்களுக்கு முன்பு பட்டாசு ஆலையில் நிகழ்ந்த தீ விபத்தால் எட்டு பேர் பலியாயினர்.