• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கண்தான விழிப்புணர்வு மாராத்தான் நிகழ்ச்சி

கண்தான விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடைபெற்ற பார்வை2.4 மாராத்தான் நிகழ்ச்சியை அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பல்லடம் நகராட்சி ரோட்டரி கிளப் ரெயின்போ அமைப்பினர் மற்றும் இமைகள் கண்தான அமைப்பினர் சார்பில் கண்தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பார்வை2.4 மாராத்தான் மற்றும் வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. பல்லடம் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை செய்தி துறை அமைச்சர் மு. பி. சாமிநாதன் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர். 5, 10, 21 கிமி என மூன்று பிரிவுகளில் மாராத்தான் மற்றும் வாக்காத்தான் 4 கிமி என நடைபெற்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 2000 க்கு மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி ப்ரீவெல் வேர்ல்ட் புக் ஆப் டேக் ரேஸ் புத்தகத்தில் பதிவானது மண்ணில் புதைக்கின்ற கண்களை மனிதர்க்குள் விதியுங்கள் என்ற நோக்கத்தில் இந்த மாரத்தான் நிகழ்ச்சியானது நடைபெற்றது.