திண்டுக்கல் அருகே புழுதி புயலால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் பகுதியில் நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணியின் போது ஏற்பட்ட புழுதியால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் எதுவும் பின்பற்றப்படாததால், தூசி மேகமாக ஊர் முழுவதும் பறந்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள் மற்றும் பெண்கள் கடும் மூச்சுத்திணறல், கண் எரிச்சல், சளி, இருமல் உள்ளிட்ட உடல்நல பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.










