“பகவத் கீதை எல்லாவற்றுக்கும் மேலானது; தயவுசெய்து அந்த புனித நூலை பைபிளுடன் ஒப்பிடாதீர்கள்” என்று கர்நாடகா கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் இயங்கி வரும் கிளாரன்ஸ் பள்ளியின் மாணவர் சேர்க்கை விண்ணப்பம் அண்மையில் பெரும் பேசுபொருளாக மாறியது. அதில், மாணவர்கள் பள்ளிக்கூடத்துக்கு பைபிள் கொண்டு வர வேண்டும் என்றும், மறைக்கல்வி வகுப்புகளில் மாணவர்கள் கலந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த விவகாரத்தை கையிலெடுத்த இந்து அமைப்புகள், அந்தப் பள்ளிக்கு எதிராக குரல் கொடுத்தன. “கிறிஸ்தவர் அல்லாத மாணவர்களை பைபிள் கொண்டு வருமாறு பள்ளி நிர்வாகம் வலியுறுத்துவதை ஏற்க முடியாது” என அவர்கள் தெரிவித்து வந்தனர். ஆனால், இந்த விமர்சனங்கள் குறித்து கவலைப்படாத கிளாரன்ஸ் பள்ளி நிர்வாகம், “பைபிளை அடிப்படையாக கொண்ட கல்வியை தான் நாங்கள் போதித்து வருகிறோம்” எனக் கூறியது. இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து பதிலளிக்குமாறு கர்நாடகா அரசு சார்பில் கிளாரன்ஸ் பள்ளிக்கு நேற்று முன்தினம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்நிலையில், கர்நாடகா கல்வித்துறை அமைச்சர் பி.சி. நாகேஷிடம் செய்தியாளர் ஒருவர், “பள்ளிப் பாடத்தில் பகவத் கீதையை சேர்க்க அரசு பரீசீலித்து வரும்போது, பைபிளை பள்ளிக்கு கொண்டு வரக் கூறுவதில் என்ன தவறு இருக்கிறது? என கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் நாகேஷ், “மதம் சார்ந்த நூல்கள் தான் பள்ளிப் பாடத்தில் இருக்கக் கூடாது. பகவத் கீதை மதம் சார்ந்தது கிடையாது.
மதம் சார்ந்த சடங்குகள் குறித்தோ, எவ்வாறு பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பது குறித்தோ பகவத் கீதை பேசுவதில்லை. உயர்ந்த நல்லொழுக்கங்களையும், மாண்புகளையுமே அது போதிக்கிறது. அது எல்லாவற்றுக்கும் மேலானது. எனவே தயவுசெய்து பகவத் கீதையுடன் பைபிளை ஒப்பிடாதீர்கள்” என்றார்.
- பட்டபகலில் வங்கியில் நகைகள் கொள்ளைசென்னை அரும்பாக்கம் வங்கி ஒன்றில் பட்டபகலில் வங்கியில் கொள்ளை நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை அரும்பாக்கம்ஃபெடரல். வங்கி […]
- ஓபிஎஸ் -டிடிவி இணைப்பு -15 ம்தேதிக்கு பிறகு முடிவுஓபிஎஸ்-டிடிவி இணையவிருப்பதாக பேசப்பட்டுவரும் நிலையில் வரும் 15ம் தேதி ஆலோசனைக்கு பிறகு முடிவு செய்யப்படும் என […]
- புடின்…புடினல்ல.. உக்ரைன் உளவுத்துறைநாம் பார்ப்பது உண்மையான புடின் அல்ல என்றும் தற்போது புடினாக இருப்பவர் டூப் என்றும் உக்ரைன் […]
- எம்எல்ஏ வீட்டில் தலைகீழாக பறந்த தேசியக் கொடிகாரைக்கால் தெற்கு தொகுதியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏவும், தற்போதைய துணை செயலாளருமான அசனா வீட்டில், […]
- அமைச்சர் பி.டி.ஆர் கார் மீது செருப்பு வீச்சுமதுரை விமானநிலையத்தில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை […]
- திண்டுக்கல்லில் சிவசேனா கட்சி ஆலோசனைக் கூட்டம்..விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தமிழக அரசு ரேஷன் கடைகளில் கொழுக்கட்டை மாவு வழங்க வேண்டும் […]
- சாத்தூரில் ஆடித்பெருந்திருவிழா கோலாகலம்…சாத்தூர் அருகே இருக்கன்குடியில் ஆடித்பெருந்திருவிழா வெள்ளிக்கிழமை வெகுவிமர்சையாக நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள […]
- சுதந்திரதினத்தை முன்னிட்டு ரஜினி வெளியிட்ட வைரல் வீடியோ75வது சுதந்திரதினத்தை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த் தமிழக மக்களுக்கு வெளியிட்டுள்ள வீடியோ75 வது சுதந்திர தினத்தை […]
- சமூக சிந்தனையாளர் மற்றும் பேராசிரியர் முது முனைவர் அழகுராஜா பழனிச்சாமி கண்டன அறிக்கைபாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் நாள் சென்னையில் […]
- ஸ்ரீவில்லிபுத்தூர் எருதுகட்டு விழா .. களம் காணும் காளைகள்..ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆடி மாத பெருவிழாவை முன்னிட்டு வெகு விமர்சையாக நடைபெற்ற எருதுகட்டு விழா. உற்சாகமாக […]
- தமிழக காவல் துறையில் ஆர்டர்லி முறை முடிவுக்கு வருகிறதுதமிழக காவல் துறையில் ஆர்டர்லி முறையை ஒழித்துக்கட்ட டி.ஜி.பி. சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்காவல்துறை பணியில் […]
- பாஜக ஆட்சியை கலாய்த்த ப.சிதம்பரம்..!சிவகங்கையில் நடைபெற்ற 75 வது சுதந்திர தினவிழா பாதயாத்திரையில் கலந்து கொண்ட ப.சிதம்பரம் பாஜக ஆட்சியை […]
- கொலை டிரைலர் வெளியீட்டு விழா தொகுப்புபாலாஜி K குமார் எழுதி இயக்க, விஜய் ஆண்டனி முதன்மை கதா பாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் […]
- அழகு குறிப்புகள்முடி வளர்ச்சிக்கு விளக்கெண்ணெய்:
- சமையல் குறிப்புகள்ஆனியன் சப்ஜி: தேவையான பொருட்கள் : செய்முறை :முதலில் சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, சோம்பு, […]