முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் 57வது நினைவு நாளையொட்டி இன்று சிவகாசி காவல் நிலையம் முன்பாக உள்ள அவரது திருவுருவ சிலைக்கு சிவகாசி மாநகர திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

சிவகாசி மாநகர பகுதி கழக செயலாளர் காளிராஜன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் இணைந்து அறிஞர் அண்ணாவின் கொள்கைகளை முழக்கங்களாக எழுப்பி உறுதிமொழி ஏற்றனர்.










