தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலையை, திமுக மூத்தத் தலைவர் ஆர்.எஸ்.பாரதி கடுமையாக விமர்சனம் செய்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவராக, கே.அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டதில் இருந்தே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களை கடுமையாக விமர்சித்து வருவதுடன், திமுக மீதும், நிர்வாகிகள் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் தெரிவித்து வருகிறார். தொடர்ந்து, திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலையும் அண்ணாமலை வெளியிட்டார். இப்படி அண்ணாமலை தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளுக்கு, அமைச்சர்களும், திமுக நிர்வாகிகளும் எதிர்வினை ஆற்றி வருகின்றனர். அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, நாசர், முத்துசாமி, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர், தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலையின் குற்றச்சாட்டுகளுக்கு தினமும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், திமுக மூத்தத் தலைவர் ஆர்.எஸ்.பாரதி நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், “நான் கேஸ் போட்டா நீ உள்ளே போக வேண்டியது வரும். என் ஜாதகம் ரொம்ப மோசமானது. ஏதோ நம்ம பையன் சின்னப் பையன் என்பதற்காக விட்டு வைத்திருக்கிறோம்” என்று எச்சரிக்கை விடுத்து இருந்தார்.
இதற்கு, அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளமான ட்விட்டரில், அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த வெற்று மிரட்டல்களால் எந்த பயனும் இல்லை, ஆர்.எஸ்பாரதி அவர்களே! மாநிலங்களவைக்கு மீண்டும் சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்த உங்களுக்கு மிஞ்சியது ஏமாற்றமே. ஆதலால் சாதி வெறுப்பை விதைப்பதற்கு முயற்சி செய்து, காலம் கடத்திக் கொண்டு இருக்கின்றீர்கள். பாவம்! இது 1967 அல்ல!” என குறிப்பிட்டு உள்ளார்.
கிருபானந்த வாரியாருக்கு ஏற்பட்ட கதி தான் அண்ணாமலைக்கும் ஏற்படும். இது போல் பேசிக் கொண்டிருந்தால் இனி நடமாட முடியாது. எங்கேயும் சென்று பேச முடியாது என்று, ஏற்கனவே, ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- யஷ்வந்த் சின்காவுக்கு ஒவைசி கட்சி ஆதரவு..ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்காவுக்கு அசாதுதீன் ஒவைசியின் மஜ்லிஸ் கட்சி […]
- இபிஎஸ் மனைவிக்கு கொரோனா..!தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மனைவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்தமிழகத்தில் மீண்டும் கொரோனா […]
- நடிகை அம்பிகா ராவ் மறைந்தார்…மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் அம்பிகா ராவ். இவர் கேரளா மாநிலம் திருச்சூரைச் […]
- அதிமுக பொதுக்குழு- இபிஎஸ் அதிரடி முடிவுஅதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதில் இபிஎஸ் அதிரடியாக முடிவெடுத்துள்ளார்.கடந்த ஜூன் 23ல் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண […]
- பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்களுக்கு நாடு முழுவதும்தடை..!இந்தியா முழுவதும், பிளாஸ்டிக் பயன்பாடு அதிகமாக உள்ள நிலையில் பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் பயன்பாட்டிற்கு மத்திய […]
- விருப்ப ஓய்வில் புதிய முறை.. தமிழக அரசு அறிவிப்புதமிழகத்தில் விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு புதிய வெயிட்டேஜ் கணக்கீட்டு முறையை தமிழக அரசு […]
- ரூ 10 ஆயிரம் மதிப்புள்ள ஆடுகள் திருட்டுமதுரையில் ரூ 10 ஆயிரம் மதிப்புள்ள ஆடு திருட்டு. ஆட்டோவில் வந்த கும்பல் கைவரிசை .மதுரை […]
- மதுரை ரயில்வே மருத்துவமனையில் காலியிடங்களில் பூர்த்தி செய்ய வேண்டும்மதுரை ரயில்வே மருத்துவமனையில் மருத்துவ காலியிடங்களில் பூர்த்தி செய்ய வேண்டும் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி மதுரையில் […]
- அங்கன்வாடி ஊழியரின் மகனுக்கு ஃபேஸ்புக்கில் வேலைகூகுள் மற்றும் அமேசான் நிறுவனத்தில் கிடைத்த வாய்ப்பை நிராகரித்த கொல்கத்தாவைச் சேர்ந்த அங்கான்வாடி ஊழியரின் மகன் […]
- கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள் யார்..? பட்டியலை வெளியிட்ட கூகுள்…2022-ம் ஆண்டு முதல் பாதியில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஆசியாவின் டாப் 100 பிரபலங்களின் பட்டியலை […]
- அதிமுக பொதுக்குழு ஏற்பாடு பணிகள் திடீர் நிறுத்தம்வரும் ஜூலை 11 அதிமுகபொதுக்குழு ஏற்பாடுகளில் இபிஎஸ் தரப்பு மும்முரமாக ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது […]
- சசிகலா-ஓ.பி.எஸ் சுவரொட்டிகள் கிழிப்பு -மதுரையில் பரபரப்புமதுரையில் சிசிகலா -ஓபிஎஸ் சுவரொட்டிகள் இபிஎஸ் ஆதரவாளர்களால் கிழிக்கப்பட்டதாக பரபரப்பு புகார்.அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், […]
- தமிழகத்தை உலகமே உற்று நோக்குகிறது – ஸ்டாலின்செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடைபெறுவதால் உலகமே தமிழகத்தை உற்று நோக்கிறது என ஸ்டாலின் பேச்சுசென்னையில், […]
- மாஸ்க் போடலன்னா மது இல்ல..!சென்னையில் மதுப்பிரியர்களுக்கு மாஸ்க் போடலன்னா மது இல்லை என டாஸ்மாக் நிர்வாகம் கண்டிஷன் போட்டிருப்பது மதுப்பிரியர்களை […]
- காரைக்குடியில் இ.பி.எஸ்.ஐ கண்டித்து போராட்டம்.சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இ.பி.எஸ்.ஐக் கண்டித்து அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,சிவகங்கை […]