• Sun. Apr 5th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

திமுக வேட்பாளர் கிருத்திகா தேவிக்கு தேமுதிக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு..,

ByPrabhu Sekar

Apr 5, 2026

தாம்பரம் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் மருத்துவர் கிருத்திகா தேவி, தேமுதிக நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆதரவு கோரிய நிகழ்வு உற்சாகமான சூழலில் நடைபெற்றது.

இந்த சந்திப்பின் போது, தேமுதிக நிர்வாகிகள் அவருக்கு சால்வை மற்றும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, உற்சாக வரவேற்பு அளித்தனர். அதற்கு பதிலளித்த கிருத்திகா தேவி, நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்து, தன்னம்பிக்கையுடன் உரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சிக்கு தேமுதிக சார்பில் மாவட்ட துணை செயலாளர் மா. செழியன் தலைமையேற்று, நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகளுடன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார். அவரது தலைமையில் நடைபெற்ற வரவேற்பு, அரசியல் உறவுகளை வலுப்படுத்தும் விதமாக அமைந்தது.

மேலும், பகுதி செயலாளர்கள் மார்கெட் ஞானபால், கேட் தர்மா, என்.ஆர். ஆனந்தன், காந்திசேகர் உள்ளிட்டோர் மற்றும் பல்வேறு தேமுதிக நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.

இந்நிகழ்வு, தாம்பரம் தொகுதியில் அரசியல் சூழலை மேலும் சூடுபிடிக்கச் செய்ததுடன், கூட்டணி கட்சிகளின் ஒற்றுமையையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.