நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலக நாஞ்சில் அரங்கில் கடந்த (மே10)ம் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். நிகழ்வில் குமரியின் அமைச்சரான மனோ தங்கராஜ் பங்கு பெற்று.குமரிமாவட்ட வனத்துறையும், மும்பை இயற்கை வரலாற்று கழகமும் இணைந்து தயாரித்த.குமரி மாவட்ட உப்பளம் பறவைகள் பற்றிய ஆராய்ச்சி குறிப்பு புத்தகத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டார். இந்த நிகழ்வில் மும்பை இயற்கை வரலாற்று கழக இணை இயக்குநர் முனைவர் பாலசந்திரன்,குமரி மாவட்ட வனத்துறை அதிகாரி இளையராஜா ஐ எப் எஸ், குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் ஐ பி எஸ், கன்னியாகுமரியை சேர்ந்த பறவை ஆராய்ச்சியாளர் சுதாமதி ஆகியோர் பங்கேற்றனர். குமரிக்கு எத்தனை காலமாக வெளிநாடுகளில் இருந்து என்னென்ன வகை பறவைகள் வருகின்றன.? குமரிக்கு வருவதற்கான அடிப்படை காரணங்கள் எவை,எவை என மும்பை இயற்கை வரலாற்று கழக இணை இயக்குநர் முனைவர் பாலசந்திரனிடம் செய்தியாளர்களின் கேள்விக்கு கிடைத்த தகவல்கள். கடந்த 25ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள பல வகை பறவைகள் குமரிக்கு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளில் ஏற்படும் கால நிலை மாற்றத்தின் போது குமரி மாவட்டத்தில் உள்ள மாறுபட்ட கால நிலை, இங்கு 700_ஏக்கர் பரப்பளவில் உள்ள உப்பளங்களில் வெளிநாட்டு பறவைகள் தங்குவதற்கான ஏற்ற காலச்சுழல் மட்டும் அல்லாது பலவகை பறவைகளின் இன விருத்திக்கும் ஏற்ற சுழலால். உலகின் பல நாடுகளில் இருந்து தனியாக இங்கு வரும் பல இன பறவைகள் அதன், அதன் குஞ்சுகள் உடன் அதனது தாயகத்திற்கு திரும்பி செல்வது. குமரியில் இயற்கை வளத்தினுடன்.பறவைகள் குஞ்சு பொரிக்கும் நிலைக்கு ஏற்றக் காலம் என்பது தான் இயற்கையின் ஒரு உன்னதமான அதிசயம்.
இந்தியாவின் தென்கோடியில் உள்ள குமரி கடற்கரையில் அமைந்துள்ளதால் பூமியின் வட பாதியிலுள்ள ஆர்டிக் பகுதியிலிருந்தும், மத்திய மேற்காசிய நாடுகளிலிருந்தும் பறவைகள் பூமியின் தென்பகுதியில் உள்ள வெப்ப நாடுகளுக்கு வலசை செல்லும் போது குமரி உப்பளங்களில் வந்து தங்கி ஓய்வெடுக்கிறன. நெடுந்தூர பயணத்திற்கான சக்தியை சேமித்து விட்டு வேனீற்காலம் தொடங்கியதும் அதன், அதன் பிறப்பிடமான ஆர்டிக் பகுதிகளுக்கு திரும்பி செல்கின்றன.

குமரி மாவட்ட உப்பளங்களுக்கு இந்தியாவில் காணப்படும் அனைத்து நீர்ப்பறவை குழுக்களையும் சேர்ந்த பறவைகள் வந்துச் செல்கின்ற. இங்கு 60_வகையான வலசை வரும் பறவைகள் ஆண்டொன்றுக்கு இரண்டு லட்சம் பறவைகள் வந்து ஒய்வு மற்றும் சில வகை பறவைகள் அதனது இன் விருத்தியின் காலமாகவும் இருக்கிறது. இதில் அதிக எண்ணிக்கையில் ஆலாக்கள்(10 இனங்கள்) வருகை புரிகின்றன.இதில் மூன்று வகையான ஆலாக்கள் பல்லாயிர கணக்கில் வருகின்றன.இதை கடந்த 30_ஆண்டுகளாக மும்பை நேசுரல் ஹிஸ்டரி சொசைட்டி கண்காணித்து வருகிறது என தெரிவித்தார். குமரியை சேர்ந்த பரவை ஆர்வலர் மற்றும் ஆராய்ச்சியாளருமான சுதாமதி நம்மிடம் தெரிவித்த தகவல்கள்.குமரி பகுதி உப்பளங்களுக்கு 25_வருடங்களுக்கு முன்பே சிறிய எண்ணிக்கையில் வர தொடங்கிய பூ நாரைகள் இப்போது பல ஆயிரங்களில் வந்து செல்கின்றன. ஆர்டிக் பகுதியிலிருந்து வலசை வரும் உள்ளான்கள் என்று அழைக்கப்படும் 28_வகையான கரையோர பறவைகள் மற்றும் 6_வகையான வாத்து இனங்களும் இந்த உப்பளங்களுக்கு ஆண்டு தோறும் வருகிறது.
தமிழக அரசு கீழ மணக்குடி, புத்தளம், சுசீந்திரம்,தேரூர் நீர் நிலை பகுதிகளை பறவைகள் சரணாலயம் ஆக அறிவித்துள்ளது.இதன் மூலம் பறவைகளை வேட்டையாடுவது முழுமையாக தடுக்கப்பட்டுள்ளது. குமரிக்கு வரும் உலக பறவைகள் பாது காப்பாக தங்கி அதன்,அதன் இன் விருத்தியுடன் தாயகத்திற்கு திரும்பும் சூழலை தமிழக அரசின் கண் காணிப்பில் செயல்படுவது.குமரியிலுள்ள பறவை ஆர்வலர்களுக்கு உற்சாகம் தருகிறது எனவும் தெரிவித்தார்.
- திருமண நாளில் ஏற்பட்ட பரிதாபம் தண்ணீரில் மூழ்கிய சிறுவர்களை காப்பாற்றிய நபர் நீரில் மூழ்கி பலிமதுரை மாவட்டம் ராஜாகங்கூர் பகுதியில் சேர்ந்தவர் முத்துக்குமார் இவருக்கு வயது 37 திருமணமாகி ஐந்து மற்றும் […]
- மதுரை அருகே பள்ளி வளாகத்தில் 4 வயது புள்ளிமான் மீ்ட்புமதுரை அவனியாபுரம் பொட்டக்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி அருகே 4 வயது புள்ளிமான் சிக்கியது அருகில் இருந்தவர்கள் […]
- ஜூன் 15ல் சென்னை வருகிறார் ஜனாதிபதி முர்மு!..கலைஞர் கருணாநிதி பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறப்புவிழாவில் பங்கேற்க ஜனாதிபதி முர்மு ஜூன்15ல் வருகை […]
- கமல்ஹாசனுக்கு பதில் கூறியதி கேரள ஸ்டோரி இயக்குநர்தி கேரளா ஸ்டோரி படம் குறித்த கமல்ஹாசனின் விமர்சனம் பற்றிய கேள்விக்கு அப்படத்தின் இயக்குநர் சுதிப்டோ […]
- கேப்டன் டோனி நெகிழ்ச்சி பேட்டிகுஜராத் அணியை வீழ்த்தி சென்னை அணி அபாரமாக வெற்றி 5 வது முறையாக சாம்பியன்ஸ் பட்டம் […]
- சாதி அரசியல் பேசும் கழுவேத்தி மூர்க்கன்-திரைவிமர்சனம்மக்களை சாதியின் பெயரால் பிரிப்பது பற்றியும், அதன் பின் இருக்கும் அரசியல் பற்றியும் பேசுகிறது `கழுவேத்தி […]
- 16வயது சிறுமியை கொடூரமாக கொலை செய்த சைக்கோ காதலன் கைதுதலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமியை அவரது ஆண் நண்பர் கத்தியால் குத்தி படுகொலை செய்த […]
- இடிக்கப்பட்ட கள்ளர் சீரமைப்பு பள்ளியை கட்டித்தர வேண்டி கலெக்டரிடம் மனுபூதிப்புரம் கள்ளர் சீரமைப்பு பள்ளியை இடித்து விட்டு கள்ளர் சீரமைப்பு பள்ளிக்கு சொந்தமான இடத்தை முறைகேடாக […]
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 31-ந்தேதி இரவு சென்னை திரும்புகிறார்முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு முறைப் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு கடந்த 23-ந்தேதி […]
- அழகுமுத்துமாரியம்மன் கோயில் பூக்குழிவிழாஅவனியாபுரம் அழகுமுத்துமாரியம்மன் கோயில் பூக்குழிவிழா. ஏராளமான பெண்கள் குழந்தைகளுடன் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். மதுரை […]
- வழிப்பறியில் கொள்ளைக்கு திட்டமிட்ட 4 பேர் கைதுபரம்புபட்டி தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் வழிப்பறியில் கொள்ளை சம்பவம் நடத்த திட்டமிட்ட நான்கு வாலிபர்கள் கையும் […]
- மதுரையில் கோடை உணவுத்திருவிழாபொழுது போக்கி விளையாட சதுரங்கம். (செஸ்) கேரம் போர்டு, ஒவியம், மெகந்தி என விளையாட்டு அம்சங்களுடன் […]
- சிலம்பம் சுற்றி ஆஸ்கர் உலக சாதனை படைத்த மாணவர்கள்ஆறுமணி நேரம் கண்ணைக் கட்டி சிலம்பம் சுழற்றிய மாணவர்கள் ஆஸ்கர் உலக புத்தக சாதனை மலரில் […]
- காளை வளர்ப்பவர்களுக்கு நிரந்தரமாக காப்பீட்டுத் திட்டம் – ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை தலைவர் பேட்டிஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும். மேலும் […]
- பால் பற்றாக்குறையை சமாளிக்க..,பசுந்தீவன சாகுபடி செய்ய ஆவின் நிர்வாகம் முடிவு..!ஆவின் மூலமாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் 30 லட்சம் லிட்டர் பால் கொழுப்பு சத்து அடிப்படையில் […]