• Sun. Mar 1st, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடல் திடீரென உள்வாங்கியதால் பக்தர்கள் அதிர்ச்சி

Byதரணி

Mar 15, 2024

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடல் இன்று 100 மீ. உள்வாங்கியது. இதனால் கடற்கரையில் பாசி படர்ந்த பாறைகள் வெளியில் தெரிந்தது. மேலும் குழியில் தேங்கி கிடந்த கடல்நீரில் குஞ்சுகள், சிற்பிகள் தத்தளித்துக் கொண்டிருந்தது. இதனை கண்ட பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மதியம் 2 மணிக்கு பின் கடல்நீர் மட்டம் உயர்ந்ததும் அக்னி தீர்த்த கடற்கரை இயல்பு நிலைக்கு திரும்பியது.