
மதுரை மாநகராட்சி டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் மேயர் இந்திராணி பொன்வசந்த், தலைமையில் நடைபெற்றது.
மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை கருத்தரங்கு கூடத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் கே.ஜே.பிரவீன் குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
தமிழகத்தில், தற்போது ஒரு சில மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு சற்று பரவலாக இருந்து வரும் நிலையில் நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்ய இதன் தொடர்பான பிற அரசுத்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. மதுரை மாநகரை பொறுத்தவரை செப்டம்பர் மாதம் 7 நபர்களுக்கு இத்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தீவிர நோய் பரவல் இல்லை என்ற நிலை இருந்தபோதிலும், எதிர்வரும் நாட்களில் நோய்ப்பரவலை கட்டுக்குள் வைப்பதற்கு இக்கூட்டம் நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் டெங்கு பரவும் தன்மை, ஏடிஎஸ் கொசுப்புழு உருவாகும் இடம், ஏடிஎஸ். கொசு வாழ்க்கை சுழற்சி முறை மற்றும் அதனை தடுக்கும் முறைகள் பற்றி விரிவாக விளக்கப்பட்டது. மேலும், அனைத்து மாநகர மற்றும் பிற அரசுத்துறை அலுவலர்களுக்கும் அவரவர் பொறுப்புகள் எடுத்துரைக்கப்பட்டது. மேலும், கடந்த 3 மாதங்களில் டெங்கு மற்றும் காய்ச்சல் பற்றிய விரிவான ஆய்வுக்கூட்டம் மண்டலவாரியாக ஆணையாளர் அவர்களால் நடத்தப்பட்டது. மண்டலவாரியாக சிறப்புக்குழுக்கள் அமைத்து உத்தரவிடப்பட்டது. மேலும் கொசுப்புகை மருந்து அடிக்கும் பணி மற்றும் கொசுப்புழு உற்பத்தி தடுத்தல் பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில், டெங்கு கொசுப்புழு உற்பத்தி தடுக்கஇ தேவையற்ற டயர்களை அப்புறப்படுத்துதல், கட்டிடப்பணி நடக்கும் இடத்தில் கொசுப்புழு உற்பத்தியாகாமல் தடுத்தல், பழைய பொருட்கள் சுழற்சி செய்யும் இடங்களை ஆய்வு செய்தல், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளில் கொசுப்புழு உற்பத்தியை தடுத்தல், மக்கள் கூடும் வணிக வளாகங்கள் மற்றும் அரசு அலுவலகங்களை ஆய்வு செய்தல் போன்ற பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும், டெங்கு மற்றும் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் காய்ச்சல் முகாம் நடத்த உத்தரவிடப் பட்டது.
இக்கூட்டத்தின் வாயிலாக கீழ்க்கண்ட கருத்துகள் தெரிவிக்கப்பட்டது : பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடு மற்றும் அருகாமையில் உள்ள இடங்களில் கொசுப்புழு தேங்காதவண்ணம் (தேவையற்ற பொருட்கள், தேங்காய் சிரட்டைகள், டயர்கள் அப்புறப்படுத்தவும் மற்றும் குடிநீர் தொட்டிகளை மூடி வைக்க வேண்டும் எனவும், காய்ச்சல் வந்தால் தாமாக மருத்துவம் செய்து கொள்ளாமல் உடனடியாக அருகாமையில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டும். மேலும் , வீடு தேடி வரும் மாநகராட்சி கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களுக்கு தகுந்த ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். அனைத்து அரசு அலுவலர்களும் தங்களுடைய அரசு அலுவலகங்களில் கொசுப்புழு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அதனை அழித்து வாரம் ஒருமுறை மாநகராட்சிக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். வணிக வளாகங்கள் தங்கள் கட்டிடத்தில் கொசுப்புழு உற்பத்தியாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கட்டிடப்பணி நடக்கும் இடங்களில் உரிமையாளர்கள் மற்றும் ஒப்பந்ததார்கள் கொசுப்புழு ஏற்படாத வண்ணம் உறுதி செய்ய வேண்டும். முன்னதாக டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த உறுதிமொழி மேயர், ஆணையாளர் ஆகியோர் தலைமையில் அனைத்துப் பணியாளர்களும் ஏற்றுக் கொண்டனர்.
இக்கூட்டத்தில், துணை மேயர் தி.நாகராஜன் நகர்நல அலுவலர் மரு.வினோத்குமார், செயற்பொறியாளர் (திட்டம்) மாலதி, கல்வி அலுவலர் நாகேந்திரன், மண்டல பூச்சியியல் வல்லுனர் முனைவர்.விக்டர், சுகாதார அலுவலர்கள், உதவி செயற்
பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மண்டல மருத்துவ அலுவலர்கள், மருத்துவர்கள், மாநகராட்சி மற்றும் அரசு பிறத்துறை அலுவலர்கள் (காவல்துறை, அங்கன்வாடி, இந்திய மருத்துவர் சங்கம், உணவுப்பாதுகாப்புதுறை ரயில்வே துறை) உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- BSNL சார்பாக பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான ஓவியப்போட்டி…மதுரையில் அக்டோபர் 1 BSNL தினத்தை முன்னிட்டு, மதுரை BSNL சார்பாக பள்ளி மாணவ மாணவியர்களுக்கான … Read more
- குமரி மாவட்டத்தில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் விஜய்வசந்த் எம். பி பங்கேற்பு..,கன்னியாகுமரி மேற்கு மாவட்டம் அடைக்காக்குழி பாத்திமாநகர் பகுதியில் இந்து மகா சபா சார்பில் விநாயகர் சதுர்த்தியை … Read more
- தொழில் முனைவோர் மற்றும் இளம் சாதனையார்களை கௌரவிக்கும் வகையில் விருதுகள்..,ஹியூமன் ரெயின்போ விஷ் பவுண்டேஷன் சார்பில், தொழில் முனைவோர் மற்றும் இளம் சாதனையார்களை கௌரவிக்கும் வகையில் … Read more
- ரூபாய் 8 கோடியில் கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலுக்கு ராஜகோபுரம்..!கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தொன்மையான இந்த கோவில் … Read more
- மதுரை அண்ணாநகர் பகுதியில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி…, பாதுகாப்பு கருதி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பாதியிலேயே நிறுத்தம்…மதுரை அண்ணா நகர் பகுதியில் 5 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் “WOW MADURAI” என்ற தலைப்பில் … Read more
- உலக மோட்டார் சைக்கிள் தினம் மற்றும் மகள் தினம் (செப்டம்பர்24)யில் கன்னியாகுமரி, ஆந்திரமாநிலம் வரை இருசக்கர வாகனப்பயணம்.கன்னியாகுமரி- ஆந்திரமாநிலம் நெல்லூர், ஆங்கோர், ஹம்சலாதேவி வரை, இந்திய மோட்டார் சைக்கிள் டூர்ஸ் அசோசியேஷன் சார்பில், … Read more
- “ஒருங்கிணைந்த தையற் தொழில் கூடம் திறப்பு விழா”..!தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர்.பழனிவேல் தியாகராஜன், ஆக்கத்தில் உருவான “வான்” … Read more
- சோழவந்தான் 8வது வார்டு இரட்டை அஹ்ரகாரத்தில் 12ம்ஆண்டு ராதாகிருஷ்ண கல்யாணம்..,சோழவந்தான் 8வது வார்டுக்கு உட்பட்ட இரட்டை அக்ரஹாரத்தில் உள்ள சந்தான கோபாலகிருஷ்ணன் கோவில் முன்பாக அமைந்துள்ள … Read more
- பத்மஸ்ரீ இராஜா இராமண்ணா நினைவு தினம் இன்று (செப்டம்பர் 24, 2004)…இராஜா இராமண்ணா (Raja Ramanna) ஜனவரி 28, 1925ல் கர்நாடகா மாநிலத்தில் தும்கூரில் பிறந்தார். தந்தையார் … Read more
- விளையாட்டை வளர்க்கும் வித்தையை சத்குருவிடம் கற்றுக் கொள்ளலாம்… ‘ஈஷா கிராமோத்சவம்’ திருவிழாவில் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் புகழாரம்..!“நம் தேசத்தில் விளையாட்டு போட்டிகள் மற்றும் பாரம்பரிய கலைகளை எப்படி வளர்த்தெடுக்க வேண்டும் என்பதை சத்குருவிடம் … Read more
- கோ-ஆப் டெக்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை துவக்கி வைத்தார் – மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித்..!சிவகங்கை மாவட்டம், தீபாவளி பண்டிகை முன்னிட்டு, சிவகங்கை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் நேற்றைய தினம் மாவட்ட ஆட்சித்தலைவர் … Read more
- மதுரையில் பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த கார், பாலத்தின் தடுப்புச் சுவற்றில் மோதி விபத்து…மதுரை பைபாஸ் சாலையில் அமைந்துள்ள வி.ஓ.சி. பாலத்தில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் … Read more
- ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது வெற்று முழக்கமாக இருக்குமே தவிர நடைமுறையில் சாத்தியம் இல்லை – வைகோ பேட்டிசென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை … Read more
- ஸ்ருதிஹாசன் – கமல்ஹாசன் இணைந்து உருவாக்கும் சுயாதீன இசை படைப்பு..!‘உலகநாயகன்’ கமல்ஹாசனும், அவரது வாரிசும், பாடகியும், நடிகையுமான ஸ்ருதிஹாசனும் ஒரு புதிய இசை படைப்பொன்றில் இணைந்துள்ளனர். … Read more
- அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா..!மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஒன்றியம், முள்ளிப்பள்ளம் கிராமத்தில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா … Read more
