சோழவந்தானில் தேமுதிக கொடியேற்ற நாள் விழா மாவட்டத் துணைச் செயலாளர் தங்கராஜ் தலைமையில் நடைபெற்றது
மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் சோழவந்தானில் தேமுதிக கொடியேற்ற நாள் விழா நடைபெற்றது. கொடியினை மாவட்ட துணை செயலாளர் தங்கராஜ் ஏற்றி வைத்தார். சோழவந்தான் பேரூர் செயலாளர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இதில் நிர்வாகிகள் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துப்பாண்டி, வடக்கு ஒன்றிய செயலாளர் தேவேந்திரன், பேரூர் அவைத் தலைவர் ஜெயவீரன், மாவட்ட நிர்வாகி நல். கர்ணன், பி.எஸ் மணி, செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்