• Sat. Apr 18th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

திருநெல்வேலியில் தேமுதிக கொடி நாள் விழா …!

தேசிய திரவிட முன்னேற்றக் கழகத்தின் மூவண்ணக்கொடியின் வெள்ளி விழா கொண்டாட்டம் நடைபெற்றது.

தேமுதிகவின் கொடி நாள் விழா இன்று (பிப்ரவரி 12) நடைபெற்றது. கொடி நாள் விழா நிகழ்ச்சிக்கு மாவட்ட கழகப் பொறுப்பாளர் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார்.
நெல்லை பகுதி கழகத்தின் சார்பாக பேட்டை 17வது வார்டில் கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது.
அதன் பின்னர் திருநெல்வேலி ஜங்ஷன் சாலை குமாரசாமி ஆலயத்தில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தச்சை பகுதி கழகத்தின் சார்பில், சிந்துபூந்துறையில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது அதன் பின்னர் பாளை பகுதி கழகத்தின் சார்பில் பாப்புலர் ஸ்டாப் அருகில் (6 வது வார்டில் )கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கழக அவைத்தலைவர் பழனிகுமார், மாவட்ட கழக துணைச் செயலாளர் முரசுமணி, தலைமை செயற்குழு உறுப்பினர் கலைவாணன், பொதுக்குழு உறுப்பினர் ஆனந்தமணி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் தங்கப்பன்,
நெல்லைப் பகுதி கழகச் செயலாளர் மணிகண்டன், தச்சை பகுதி கழகச் செயலாளர் தமிழ்மணி, பாளை பகுதி கழகச் செயலாளர் ஆரோக்கிய அந்தோணி, மேலப்பாளையம் பகுதி நிர்வாகி குறிச்சி குட்டி, நாராயணம்மாள்புரம் பேரூர் கழகச் செயலாளர் அரியநாயகம், தச்சைப் பகுதி கழகப் பொருளாளர் செல்வராஜ் , மாவட்ட ஜடி விங் செயலாளர் தவசி தம்பா, மாவட்ட இளைஞரணி செயலாளர் மலர் முத்து மகாராஜன், இளைஞரணி துணைச் செயலாளர் முரளிதரன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் அருள்மேரி, மாவட்ட மாணவரணி செயலாளர் நவீன் ஜெய்சிங், துணைச் செயலாளர்
மாவட்ட தொழிற்சங்க துணைச் செயலாளர் கார்த்திக், சுடலைமணி, தச்சைப் பகுதி நிர்வாகிகள் மாரியப்பன், சீனிவாசன், வர்கீஸ், இசக்கிமுத்து, துரை, பாளை பகுதி கழக நிர்வாகிகள் தினகரன், சுப்பிரமணியன், குப்புசாமி, மகேந்திரன், கணேசன், வேல்முருகன், மகாராஜன், பொன்னுதுரை, ஹென்றி, நெல்லை பகுதி கழக நிர்வாகிகள்
ஆறுமுகப்பிரியன், அந்தோணி ராஜ், இசக்கி, சொரிமுத்து, சிறுத்தை முருகன் சரவணன், முருகன், மணி, சிவக்குமார் முருகன், கணேசன், நம்பி, கணேசன், செந்தூர் மற்றும் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

தலைவர் கேப்டன் விஜயகாந்த் கண்டு தந்த கொடியை இயக்கத்தின் கொடியாக கேப்டன் தந்ததின் 25_ ம் ஆண்டை தொட்டுவிட்டது.

கேப்டன் விஜயகாந்த் தந்த கொடியின் வெள்ளி விழா ஆண்டில் நெல்லைச் சீமையில் அனைத்து இடங்களிலும் கொடி ஏற்றி எங்கள் விழாவை தொண்டர்கள் மகிழ்ச்சியாக கொண்டாடுகிறோம் என உற்சாகமாக தெரிவித்தார்கள்.