• Wed. Feb 18th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளியை தூக்கிலிட கோரிக்கை..,

BySeenu

Nov 4, 2025

கோவை விமான நிலையம் பின்புறம் கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளியை தூக்கிலிட வேண்டும் கோரிக்கை வைத்து தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறை மாநில செயலாளர் இமயம் ரஹ்மத்துல்லா தலைமையில் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாநில செயலாளர் இமயம் ரஹமத்துல்லா குற்றவாளிகள் இதுபோல சமூக விரோத செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்த விவகாரத்தில் கோவை மாநகர் காவல்துறை மற்றும் தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் குற்றவாளியை பிடித்ததற்கு நன்றி தெரிவித்தனர்.