கோடிக்கணக்கில் லஞ்சம் அளித்த குற்றச்சாட்டில் இபிஎஸ் சம்பந்தி மகன் மீது கர்நாடக லோக் ஆயுக்தா வழக்கு பதிவு செய்துள்ளது.
இபிஎஸ் முதலமைச்சராக இருந்த போது அரசு ஒப்பந்தங்களை முறைகேடாக தம் சம்பந்தி ராமலிங்கத்தின் குடும்ப நிறுவனங்களுக்கு அளித்ததாக புகார்கள் உள்ளன. இதேபோல் பெங்களூரு பெருநகர வளர்ச்சி ஆணையத்திடமிருந்து ஒப்பந்தம் பெற அப்போதைய முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு 12.5 கோடி லஞ்சம் அளித்த குற்றச்சாட்டில் இபிஎஸ் சம்பந்தியின் மகன் சந்திரகாந்தி மீது கர்நாடக லோக் ஆயுக்தா வழக்கு பதிவுசெய்துள்ளது.