தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு தினசரி பாதிப்பு, மிகவும் குறைந்திருந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக மூன்று மடங்காக அதிகரித்து வருகிறது. கடந்த 4 ஆம் தேதி 2 ஆயிரத்தில் இருந்த கொரோனா பாதிப்பு இன்று 8,944 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.
அதிவேகமாக பரவி வரும் கொரோனா தொற்று, இந்த முறை திரைபிரபலங்கள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது! ஆண்டு இறுதியில், வடிவேலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது! பின் 2022 ஆம் ஆண்டின் துவக்கத்தில் கொரோனாவில் இருந்து வீடு திரும்பினார்!
அவரைத்தொடர்ந்து,
அருண் விஜய்:
ஜனவரி 5ம் தேதி, நடிகர் அருண் விஜய் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்!

இது குறித்து அவரது பதிவில், ‘எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். நான் தற்போது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். மருத்துவரின் அறிவுரைப்படி அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றி வருகிறேன். அனைவரது அன்புக்கும் நன்றி’ என்று குறிப்பிட்டிருந்தார்!
மீனா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா!
ஜனவரி 6ம் தேதி, நடிகை மீனா மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டதாக, மீனா தனது இன்ஸ்டா பக்கத்தில் உறுதி செய்திருந்தார்!

இது தொடர்பாக அவர் தனது பதிவில், ‘2022ஆம் ஆண்டில் என் வீட்டுக்கு வந்த முதல் விருந்தாளி, மிஸ்டர் கொரோனா! என் ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் அதற்குப் பிடித்துவிட்டது. ஆனால், நான் அதைத் தங்கியிருக்க அனுமதிக்க மாட்டேன். கவனமாக இருக்கவும் மக்களே. பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளுங்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார்!
இசையமைப்பாளர் தமன்!
இசையமைப்பாளர் தமன், தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், ”இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியிருந்தும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தும் எனக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு மருத்துவர்களின் அறிவுரைப்படி பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி வருகிறேன். என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தயவுசெய்து கொரோனா பரிசோதனை செய்துகொள்ளவும்.” என்று குறிப்பிட்டுள்ளார்!
த்ரிஷா!
ஜனவரி 7ம் தேதி, நடிகை த்ரிஷா தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தனது சமூக வலைதளப் பக்கங்களில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், ”அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த போதிலும் சற்று முன்பு எனக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து அறிகுறிகளும் எனக்கு ஏற்பட்டன. அது எனக்கு மிகவும் அழுத்தம் மிகுந்த வாரமாக இருந்தாலும் தடுப்பூசிகள் காரணமாக இன்று நான் குணமடைந்து வருகிறேன். என்னுடைய பரிசோதனைகளை முடித்து மீண்டும் வீடு திரும்புவேன் என்று நம்புகிறேன். எனக்காக பிரார்த்தனை செய்த என்னுடைய மிகச்சிறந்த குடும்பத்துக்கும் என்னுடைய நண்பர்களுக்கும் என்னுடைய இதயம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்”. என்று கூறியுள்ளார்!
சத்யராஜ் மற்றும் ப்ரியதர்ஷன்!
இந்நிலையில் இன்று (ஜனவரி 8) நடிகர் சத்யராஜுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு தற்போது அவர் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்!

அதேபோல பிரபல இயக்குநர் பிரியதர்ஷனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கோலிவுட் மட்டுமின்றி டோலிவுட், பாலிவுட் இரண்டையும் விட்டுவைக்கவில்லை கொரோனா!
மகேஷ் பாபு:
ஜனவரி 6ம் தேதி, முன்னணி தெலுங்கு நடிகரான மகேஷ் பாபுவுக்கு தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவரது பதிவில், “தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்த போதிலும் எனக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. என்னை நானே வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். என்னோடு தொடர்பில் இருந்த அனைவரும் தங்களை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். தடுப்பூசி போடாதவர்கள் அனைவரும் உடனடியாக போட்டுக் கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்!
ஸ்வரா பாஸ்கர்
ஜனவரி 7ம் தேதி, பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ”எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜன.5 அன்று எனக்கு அறிகுறிகள் ஏற்பட்டன. பரிசோதனை முடிவுகளும் அதனை உறுதி செய்துள்ளன. 5ஆம் தேதி மாலை முதல் நானும் என் குடும்பத்தினரும் எங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறோம். தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நான் எடுத்துக் கொண்டேன். இந்த வாரம் நான் சந்தித்த அனைவரிடமும் இந்தத் தகவலைச் சொல்லிவிட்டேன். ஆனால், என்னுடன் யாராவது தொடர்பில் இருந்திருந்தால் தயவுசெய்து அவர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளவும்”. என்று குறிப்பிட்டுள்ளார்!

தொடர்ந்து பல சினிமா பிரபலங்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி வரும் நிலையில், சினிமா தொடர்பான வெளியீடுகளும், வேலைகளும் பாதிக்கப்படுவதால், திரை உலகமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது!
- ஜெயலலிதாவை முன் வைத்து சசிகலா நடத்திய அரசியலை சொல்லும் ‘செங்களம்’எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் ஜீ-5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள புதிய இணையத் தொடர் ‘செங்களம்’.இந்த இணையத் தொடரில் […]
- மதுரையில் மக்கள் தேசம் கட்சி அகில இந்திய ஆதிதிராவிடர் பறையர் பேரவை ஆலோசனை கூட்டம்மதுரையில் மக்கள் தேசம் கட்சி அகில இந்திய ஆதிதிராவிடர் பறையர் பேரவை மாநில மாவட்டம் ஒன்றியம் […]
- கூடலூர் அருகே கரிய சோலை தொடக்கப்பள்ளியின்வெள்ளி விழாகரிய சோலை தொடக்கப்பள்ளியில் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் கோலாகலமாக நடைபெற்றது. மாணவர்களின் கண்கவர் கலை […]
- என் மக்களுக்காக பணியாற்றுவதை வரமாக கருத்துகிறேன்-நிதியமைச்சர் பி.டி.ஆர். பேச்சு30ஆண்டுகள் வெவ்வேறு நாடுகளில் பணியாற்றிய அனுபவங்களை பெற்று அதை அனைத்தையும் இணைத்து ஐம்பது வயதிற்கு மேல் […]
- ராகுல்காந்தியின் எம்.பி பதவி பறிப்பு -குமரி கிழக்கு,மேற்கு மாவட்டங்களில் தர்ணாராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தகுதி நீக்கம் செய்தபிரதமர் மோடியைகண்டித்து.குமரிகிழக்கு,மேற்கு மாவட்டங்களில் காங்கிரஸ் தர்ணா போராட்டம்.தமிழ் […]
- கணவனை சரமாரியாக வெட்டி படுகொலை செய்த மனைவிதிருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன் குளத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் தலையில் கல்லை போட்டு சரமாரியாக […]
- இலவச கண் பரிசோதனை மற்றும் கண் புரை அறுவை சிகிச்சை முகாம்சென்னை சாலிகிராமம் கே.கே.சாலையில் அமைந்துள்ள காவேரி அரசு பள்ளியில் இலவச கண் பரிசோதனைமற்றும் கண் புரை […]
- முதல்வர் , நிதி அமைச்சருக்கு புனித ஜார்ஜ் பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனைபேராலயத்திற்கு வளர்ச்சிப் பணிக்காகவும் , சீரமைப்பு பணிக்காகவும் பட்ஜெட் அறிக்கையில் நிதி ஒதுக்கியதற்கு நன்தெரிவிக்கும் விதமாக […]
- 36ஒன்வெப் செயற்கைகோள்களை வெற்றிகரமாக ஏவிய இஸ்ரோஇந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ 36 OneWeb செயற்கைக்கோள்களின் (ISRO 36 OneWeb) இரண்டாவது […]
- இன்று இயற்பியலுக்கான முதலாவது நோபல் பரிசு வென்ற வில்லெம் ரோண்ட்கன் பிறந்த நாள்இயற்பியலுக்கான முதலாவது நோபல் பரிசு வென்ற, எக்ஸ் கதிர்களை கண்டுபிடித்த வில்லெம் ரோண்ட்கன் பிறந்த நாள் […]
- டெல்லியில் சத்தியாகிரக போராட்டம்- தடையை மீறி கார்கே-பிரியங்கா பங்கேற்புஇந்தியா முழுவதும் காங்கிரசார் சத்தியாகிரக போராட்டம்- டெல்லியில் தடையை மீறி கார்கே-பிரியங்கா பங்கேற்புபிரதமர் மோடியை ராகுல்காந்தி […]
- விண்ணில் பாய்ந்தது ‘எல்.வி.எம்3-எம்3 ராக்கெட்’வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த எல்.வி.எம்.3 ராக்கெட் செயற்கைகோள்களை சுற்றுவட்டபாதையில் நிலை நிறுத்தியது.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் […]
- பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவேன்- ஓ.பன்னீர்செல்வம்அ.தி.மு.க.வில் பழைய விதிகள் தொடர்ந்தால் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவேன் எனஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்புமயிலாடுதுறை அ.தி.மு.க. ஓ.பி.எஸ். […]
- சோழவந்தான் நகர அரிமா சங்கம் சார்பில் இலவச கண் மருத்துவ முகாம்சோழவந்தான் நகர அரிமா சங்கம் சார்பில்.இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் சோழவந்தானில் நகர […]
- திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் […]