விஜய் மல்லையாவுக்கான தண்டனை விபரம், வரும் ஜன., 18 ல் அறிவிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கர்நாடகாவைச் சேர்ந்த தொழிலதிபர் விஜய் மல்லையா, 9,000 கோடி ரூபாய் வங்கிக் கடன் பெற்று, அதை திருப்பி செலுத்தாமல் வெளிநாடு தப்பி சென்றார். லண்டனில் உள்ள அவரை, இந்தியாவுக்கு கொண்டுவர பலவேறு நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.

விஜய் மல்லையாவுக்கு எதிராக வங்கிகள் கூட்டமைப்பு உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கில் விஜய் மல்லையா குற்றவாளி என தீர்ப்பளிக்கப் பட்டது. வழக்கில் மல்லையா குற்றவாளி என அறிவிக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகிவிட்டது. ஆனால், அவருக்கான தண்டனை மீதான விசாரணை மட்டும் இன்னும் முடியவில்லை.
நீதிமன்றத்தில் மல்லையா ஆஜராக போதிய அவகாசம் வழங்கப்பட்டுவிட்டது. இனியும் காத்திருக்க முடியாது. அதனால் மல்லையாவுக்கு வழங்கப்படும் தண்டனை மீதான விசாரணை, வரும் ஜன., இரண்டாவது வாரத்தில் நடத்தப்பட்டு,18 ல் தீர்ப்பு வெளியாக உள்ளது.
- தொழில் முனைவோர்களை உருவாக்கும் ஸ்மார்ட் இந்தியா ஹாக்கத்தான்..,

- மகளிர் தொண்டரணி நிர்வாகிகள் அறிமுகம் கூட்டம்..,

- பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்..,

- தாடி பாலாஜிக்கு ஒரு லட்சம் உதவியினை வழங்கிய பி.டி செல்வகுமார்..,

- நெல் சேமிப்பு கிடங்கு கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா..,

- புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி காரைக்காலில் பேட்டி..,

- வள்ளி தேவசேனா சிவசுப்பிரமணிய சுவாமி சிறப்பு வழிபாடு..,

- போலீசார் தடுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு..,

- தேசிய மனித உரிமைகள் நாள் உறுதிமொழி ஏற்பு..,

- இந்திய விவசாய சங்கம் சார்பாக நகல் எரிப்பு போராட்டம்..,





