விஜய் மல்லையாவுக்கான தண்டனை விபரம், வரும் ஜன., 18 ல் அறிவிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கர்நாடகாவைச் சேர்ந்த தொழிலதிபர் விஜய் மல்லையா, 9,000 கோடி ரூபாய் வங்கிக் கடன் பெற்று, அதை திருப்பி செலுத்தாமல் வெளிநாடு தப்பி சென்றார். லண்டனில் உள்ள அவரை, இந்தியாவுக்கு கொண்டுவர பலவேறு நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.
விஜய் மல்லையாவுக்கு எதிராக வங்கிகள் கூட்டமைப்பு உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கில் விஜய் மல்லையா குற்றவாளி என தீர்ப்பளிக்கப் பட்டது. வழக்கில் மல்லையா குற்றவாளி என அறிவிக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகிவிட்டது. ஆனால், அவருக்கான தண்டனை மீதான விசாரணை மட்டும் இன்னும் முடியவில்லை.
நீதிமன்றத்தில் மல்லையா ஆஜராக போதிய அவகாசம் வழங்கப்பட்டுவிட்டது. இனியும் காத்திருக்க முடியாது. அதனால் மல்லையாவுக்கு வழங்கப்படும் தண்டனை மீதான விசாரணை, வரும் ஜன., இரண்டாவது வாரத்தில் நடத்தப்பட்டு,18 ல் தீர்ப்பு வெளியாக உள்ளது.
- ‘சினிமா சங்கி’ – இயக்குனர் சுந்தர் சி-ஐ விமர்சித்த பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன்..,

- தாய் பிறந்த மண்ணில் உணர்ச்சிப் பொங்க வாக்குச் சேகரிப்பு..,

- வேறு கட்சியினர் பிரச்சாரம் செய்ய அனுமதிக்க மாட்டோம்..,

- கள்ள சந்தையில் மது விற்பதாக அமைச்சரிடம் பெண்கள் புகார்..,

- மக்களை பார்த்து சாப்பிட்டீர்களா என்று நலம் விசாரித்த ஒட்டன்சத்திரம் வேட்பாளர் ..,

- திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்..,

- தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த ஏவிசிசி கணேசன்..,

- அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பாவை ஆதரித்து நடிகை குஷ்பூ தேர்தல் பரப்புரை..,

- பல்லாவரம் தொகுதியில் வீதி வீதியாக வாக்கு சேகரித்த படப்பை குமார்..,

- கேகே. செல்லபாண்டியனுக்கு தீவிர வாக்கு சேகரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..,





