விஜய் மல்லையாவுக்கான தண்டனை விபரம், வரும் ஜன., 18 ல் அறிவிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கர்நாடகாவைச் சேர்ந்த தொழிலதிபர் விஜய் மல்லையா, 9,000 கோடி ரூபாய் வங்கிக் கடன் பெற்று, அதை திருப்பி செலுத்தாமல் வெளிநாடு தப்பி சென்றார். லண்டனில் உள்ள அவரை, இந்தியாவுக்கு கொண்டுவர பலவேறு நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.
விஜய் மல்லையாவுக்கு எதிராக வங்கிகள் கூட்டமைப்பு உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கில் விஜய் மல்லையா குற்றவாளி என தீர்ப்பளிக்கப் பட்டது. வழக்கில் மல்லையா குற்றவாளி என அறிவிக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகிவிட்டது. ஆனால், அவருக்கான தண்டனை மீதான விசாரணை மட்டும் இன்னும் முடியவில்லை.
நீதிமன்றத்தில் மல்லையா ஆஜராக போதிய அவகாசம் வழங்கப்பட்டுவிட்டது. இனியும் காத்திருக்க முடியாது. அதனால் மல்லையாவுக்கு வழங்கப்படும் தண்டனை மீதான விசாரணை, வரும் ஜன., இரண்டாவது வாரத்தில் நடத்தப்பட்டு,18 ல் தீர்ப்பு வெளியாக உள்ளது.
- வேகத்தடையில் தன்னந்தனியாக வெள்ளை பெயிண்ட் அடித்துச் சென்ற பெண்…,

- அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்..,

- அதிமுக வரும் தேர்தலில் எதிர்க்கட்சியாக கூட ஜெயிக்காது என நினைக்கிறேன்- இ. பெரியசாமிபேட்டி..,

- மக்கள் நலக்கூட கட்டிடத்தை திறந்து வைத்த அமைச்சர்..,

- திமுக நகர் மன்ற தலைவர் மற்றும் நகராட்சி நிர்வாகம் புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு..,

- கோவை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மாஞ்சி பேட்டி..,

- பொய்யான பாலியல் புகார் அளித்த வழக்கில் அதிரடி தீர்ப்பு..,

- தக்காளி சாகுபடி செய்த விவசாயிகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை..,

- பொதுக்கூட்டத்திற்கு குழந்தைகளை அழைத்து வருவதை தவிர்க்க வேண்டும்-பொன்.பாலகணபதி பேட்டி..,

- ஈஷா யோக மையம் குறித்து அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்..,







