இந்தியா கூட்டணி சார்பில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் விஜய் வசந்த் தொடர்ந்து குமரி மக்களை நேரில் சந்தித்து தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றார்.
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேரேகால் புதூர் பகுதியில் தனது தேர்தல் பரப்புரையை துவங்கினார். இதில் நாகர்கோவில் மாநகர மேயர் மகேஷ், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் கே.டி.உதயம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் செல்லச்சாமி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.