• Tue. Mar 19th, 2024

குண்டும் குழியுமான தேசிய நெடுஞ்சாலை- சீரமைத்த டிஎஸ்பி க்கு பாராட்டு

விபத்தை ஏற்படுத்தி வந்த குண்டும் குழியுமான நாகர்கோவில்-களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலை

5-கிலோ மீட்டர் சாலையை 100-போலீசார் மற்றும் ராணுவ வீரர்களை வைத்து சீரமைத்த டிஎஸ்பி க்கு குவியும் பாராட்டு. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலிருந்து கேரளா மாநிலம் திருவனந்தபுரம் செல்ல சுமார் 50-கிலோ மீட்டர் தூரம் அமைந்துள்ளது தேசிய நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை கன்னியாகுமரி திருவனந்தபுரம் நான்கு வழிச்சாலை பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் கழிந்த 5-ஆண்டுகளாக பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக காணப்பட்ட நிலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளானதோடு சாலை விபத்துகளில் பெரும் உயிரிழப்புகளும் ஏற்பட்ட நிலையில் சாலையை சீரமைக்க பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கைகள் முன் வைத்த நிலையிலும் சீரமைப்பு பணிகள் செய்யப்படாமல் கிடப்பிலேயே இருந்த நிலையில் தற்போது கடந்த 20-நாட்களுக்கு மேலாக பெய்த கனமழையால் நெடுஞ்சாலையில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்ட நிலையில் தினம்தோறும் அரங்கேறும் சாலை விபத்துக்களால் நூற்றுக்கு மேற்பட்டோர் விபத்துக்குள்ளாகி நெடுஞ்சாலைக்கு உட்பட்ட தக்கலை உட்கோட்ட தக்கலை, மார்த்தாண்டம், களியக்காவிளை, திருவட்டார் காவல் நிலையங்களில் விபத்து வழக்குகள் பதிவாகி வந்த நிலையில் நெடுஞ்சாலையில் மிகவும் சேதமடைந்த பகுதிகளை தற்காலிகமாக சீரமைத்து விபத்தை தவிர்க்கும் நோக்கில் தக்கலை டிஎஸ்பி கணேசன் இன்று 100+போலீசார் விடுப்பில் இருக்கும் ஜவான்ஸ் அமைப்பை சேர்ந்த 50-ராணுவ வீரர்கள் மற்றும் எர்த் மூவர்ஸ் சங்கம் சார்பில் 12 மினி லாறிகளை பெற்று கல்குவாரி கழிவுகளை ஏற்றி வந்து இன்று அந்த சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டார் தக்கலை முதல் மணலி ஜங்சன் பரைக்கோடு மற்றும் அழகியமண்டபம் பகுதி வரை என தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 5-கிலோ மீட்டர் தூர சாலையை சீரமைத்தனர் டிஎஸ்பி கணேசன் செய்த இந்த சேவையை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டி சென்றனர் டிஎஸ்பி கணேசன் ஏற்கனவே சென்னை கோட்டை காவல் நிலையத்தில் மூலிகை தோட்டம் அமைத்து பராமரித்து பாராட்டை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *