திருப்பூர் தாராபுரம் சாலையில் விதிமீறி அமைக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலை சுங்கச் சாவடியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரியிடம் நேரில் வலியுறுத்தி உள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி – திருப்பூர் – அவிநாசிபாளையம் நெடுஞ்சாலை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்டத்தின் கீழ் புதுப்பித்து அமைக்கப்பட்டு உள்ளது. எனினும் இந்த சாலையில் சுமார் 20 கிலோமீட்டர் தூரம் திருப்பூர் மாநகராட்சிப் பகுதிக்குள் அமைந்துள்ளது.
நான்கு வழிச் சாலைக்கு உரிய அகலம், விதிமுறைகள் முழுமையாக கடைப்பிடிக்கப்படாமல், ஏற்கெனவே இருக்கும் சாலையையே அப்படியே தேசிய நெடுஞ்சாலையாக உருமாற்றி உள்ளனர். இந்த சாலையில் வடக்கு அவிநாசிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வேலம்பட்டி கிராமத்தில் நீர்நிலைக் குட்டையை ஆக்கிரமித்து நெடுஞ்சாலை சுங்கச் சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கு இப்பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 2018ஆம் ஆண்டு அப்போதைய திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் இந்த இடத்தை ஆய்வு செய்து நீர்நிலை குட்டையில் சுங்கச் சாவடி அமைக்கப்பட்டு இருப்பதாக அறிக்கை அளித்ததுடன், பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் அந்த ஆக்கிரமிப்பை அகற்றவும் உத்தரவிட்டார். எனினும் கடந்த மூன்றாண்டு காலமாக அங்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அதே சமயம் வேலம்பட்டி சுங்கச் சாவடியை நடைமுறைக்குக் கொண்டு வர தேவையான முன்னேற்பாடுகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கு எதிராக சுங்ச் சாவடி எதிர்ப்பு இயக்கத்தை உருவாக்கி அந்த சுற்று வட்டார விவசாயிகள், பொது மக்கள மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் ஆலோசனைக் கூட்டம் நடததினர். மாவட்ட ஆட்சியரிடம் இது தொடர்பாக முறையிட்டதுடன், 6ஆம் தேதி சுங்கச் சாவடி அமைக்கப்படும் இடத்தில் போராட்டம் நடத்தவும் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.மூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர் ஜி.சம்பத் ஆகியோர் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜனிடம் இது குறித்து புதன்கிழமை நேரில் முறையிட்டனர். இதைத் தொடர்ந்து பி.ஆர்.நடராஜன் எம்.பி. சி.மூர்த்தி, ஜி.சம்பத் ஆகியோருடன் கோவையில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணைய துணைப் பொது மேலாளரும், திட்ட இயக்குநருமான சி.பாலாஜி வெங்கடேஸ்வரனை சந்தித்து இப்பிரச்சனை குறித்துப் பேசினார்.
கிராமத்தில் உள்ள நீர்நிலைக் குட்டையை ஆக்கிரமித்து சுங்கச் சாவடி அமைக்கப்பட்டு இருப்பதுடன், உரிய விதிமுறைகளைப் பின்பற்றியும் இந்த நெடுஞ்சாலை அமைக்கப்படவில்லை. எனவே வேலம்பட்டி கிராமத்தில் சுங்கச்சாவடி அமைத்து சுங்கம் வசூலிக்கும் ஏற்பாட்டை கைவிட வேண்டும், இது குறித்து பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தினார். நீர்நிலை குட்டை இருப்பது தங்கள் கவனத்துக்கு வரவில்லை என்று திட்ட இயக்குநர் கூறியதை ஏற்க முடியாது என்றும் அவர்கள் உறுதியுடன் தெரிவித்தனர். மேலதிகாரிகளுடன் கலந்து பேசி தகவல் தெரிவிப்பதாக திட்ட இயக்குநர் சி.பாலாஜி வெங்கடேஸ்வரன் பதில் கூறினார்.
- தூத்துக்குடியில் களவு போன 13 சவரன் தங்க நகைகள் மீட்புதூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீடு புகுந்து தங்க நகைகளை திருடிய வழக்கில் […]
- தமிழக வேளாண் பட்ஜெட் -மதுரை மாவட்ட மல்லிகை பூ விவசாயிகள் வரவேற்புதமிழக வேளாண் பட்ஜெட்டில் மதுரை மல்லிகைப் பூ விவசாயத்தை மேம்படுத்த அறிவிப்பு வெளியிட்டதற்கு மதுரை மாவட்ட […]
- ஸ்மார்ட் காவலர் செயலியை சிறப்பாக செயல்படுத்தி வரும் காவலர்களுக்கு பரிசுதிருநெல்வேலி மாவட்ட காவல் துறையில் “ஸ்மார்ட் காவலர் செயலியை சிறப்பாக செயல்படுத்தி வரும் காவலர்களுக்கு பரிசு […]
- சத்குருவிற்கு நன்றி சொன்ன பழங்குடி மாணவிகள்“பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி உள்ள நாங்கள் ஈஷாவின் உதவி இல்லாமல் கல்வி கற்று இருக்க […]
- பழனியில் தங்கும் விடுதிகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வுபழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர் பக்தர்கள் பழனியில் தங்கி முருகனை […]
- உலக காடுகள் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகளை நடவுஉலக காடுகள் தினத்தை முன்னிட்டு உதகை சுபாஷ் சந்திரபோஸ் பூங்காவில் நகராட்சி கமிஷனர் காந்திராஜ் மரக்கன்றுகளை […]
- மத்திய அரசின் நலத் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம்நீலகிரி மாவட்டம் உதகை கிழக்கு மண்டல் தும்மனாடா கிராமத்தில் மத்திய அரசின் நலத் திட்டங்கள் குறித்து […]
- தவறான செய்திகளை வெளியிட வேண்டாம் – பவர்ஸ்டார் சீனிவாசன் வேண்டுகோள்புகழேந்தி புரொடக்சன்ஸ் எனும் பட நிறுவனம் மூலம் தமிழரசி புலமைப்பித்தன் தயாரித்து வெளியிடும் திரைப்படம் ‘எவன்’. […]
- மது போதை தாறுமாறாக ஓடிய கார்… பலர் காயம்-மதுரையில் பரபரப்புமதுரை பழங்காநத்தம் பகுதியில் இருந்து இரவு 9:15 மணி அளவில்TN59CL555 என்கின்ற கார் பைபாஸ் சாலையில் […]
- ஆலயங்களின் வழிபாட்டு முறையில் இந்து அறநிலையத்துறை தலையிடக்கூடாது -ஹிந்துஸ்தான் தேசிய கட்சியின் தலைவர் பேட்டி+2 வரை அனைவருக்கும் இலவச கல்வி என்கிற சட்டம் இயற்ற வேண்டும், ஆலயங்களின் வழிபாட்டு முறையிலும், […]
- இன்றைய வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்2023 – 2024 ஆண்டிற்கான பட்ஜெட்டை வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். கடந்தாண்டை […]
- பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் உண்டியல் எண்ணிக்கைபழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் முதல் நாள் உண்டியல் காணிக்கை 2 கோடியே 91 லட்சத்து […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 141: இருஞ் சேறு ஆடிய கொடுங் கவுள் கய வாய்மாரி யானையின் மருங்குல் […]
- அதிமுக சார்பாக நீர் மோர் பந்தல்- கே.டி. ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார்ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா அதிமுக சார்பாக நீர் மோர் பந்தலை முன்னாள் […]
- மது பாட்டில் உள்ளே லேபிள்… குடிமகனின் குமுறல் -வைரலாகும் வீடியோமது பாட்டில் உள்ளே லேபிள் கவர்மெண்ட் இப்படி செய்யலாமா? குடிமகனின் குமுறல் – சமூக வலைதளங்களில் […]