மதுரை மாவட்டம் பாலமேடு பேரூராட்சியில் ரூபாய் 14.5 லட்சம் மதிப்பீட்டில் சிறுவர் விளையாட்டு பூங்கா மற்றும் மஞ்சமலை நகர் பகுதியில் நவீன சமுதாய கழிப்பறை ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம். எல். ஏ. திறந்து வைத்தார். இதில் பேரூராட்சி மன்ற தலைவர் சுமதி பாண்டியராஜன் துணைத் தலைவர் ராமராஜ், பேரூராட்சி செயல் அலுவலர் தேவி, திமுக மாவட்ட அவை தலைவர் பாலசுப்பிரமணியன், பாலமேடு பேரூர் செயலாளர் மனோகர வேல்பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் சரந்தாங்கி முத்தையா, அலங்காநல்லூர் பேரூராட்சி தலைவர் , ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், ஒன்றிய செயலாளர்கள் தனராஜ், பரந்தாமன், மற்றும்.பிரதீப் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பேரூராட்சி பணியாளர்கள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.