• Fri. Jun 12th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

சி.பி.எஸ்.சிபள்ளியின் போதை விழிப்புணர்வு பேரணி..,

ByM.I.MOHAMMED FAROOK

Sep 7, 2025

காரைக்கால் மாவட்டம் கீழகாசாக்குடி ஆத்மாலயா சி.பி.எஸ்.சி மேல்நிலைப் பள்ளியின் சார்பில் போதை விழிப்புணர்வு பேரணி காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கியது.

இப்பேரணியை பள்ளி தலைவர் எம்.சங்கரநாராயணன் தாளாளர் எஸ்.சித்ராதேவி சங்கரநாராயணன் ஆகியோர் கொடிய சேர்த்து துவங்கி வைத்தனர். இதில் பள்ளி முதல்வர் எஸ்.சுகன்யா மற்றும் துணை முதல்வர் எம்.மாதவன், இருபால் ஆசிரிய பெருமக்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி காரைக்கால் மாவட்டத்தின் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்றனர்.

பேரணையின் போது மாணவர்கள் விழிப்புணர்வு வாசகங்களை முழக்கமிட்டு சென்றனர் இப்பேரணி புதிய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.