அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம்சார்பாக நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் கு. அன்பழகன் போட்டியிடுவதாக பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா அறிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்றத்தில் போட்டியிடும் வேட்பாளர் கு. அன்பழகன் முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ. ஆவார். அவர் தேர்தல் நடத்தும் அலுவலர் சுகுமாரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
அப்போது அவருடன் நிலக்கோட்டை நால்ரோட்டில் இருந்து கட்சி நிர்வாகிகள் பெண்கள் உட்பட ஏராளமான மக்கள் ஊர்வலமாக வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்ய வந்தனர்.



