தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிப்.25-ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மார்ச் 14-ம் தேதி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. வரும் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யவுள்ளாா். இதில் பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. மார்ச் 15- ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்த நிலையில், பிப்ரவரி 25-ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் மதியம் 12 மணியளவில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். இதில் 2025-26-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள அதுதொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது.