முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் இன்று காலை தொடங்கியது காலை 9.30 மணி அளவில் அமைச்சரவை கூட்டம் தொடங்கிய நிலையில் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டனர். இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் முடிவடைந்தது. அடுத்த மாதம் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆன்லைன் ரம்மி தடை சட்டம் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. ஆன்லைன் ரம்மி தடை சட்டம் குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது. புதிய தொழில் முதலீடுகள் உள்ளிட்ட வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.