• Sun. Mar 15th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

ரத்ததானம் விழிப்புணர்வு பேரணி

ByK Kaliraj

Jun 14, 2025

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மாரனேரி கிருஷ்ணசாமி சி.பி.எஸ்.சி. மெட்ரிகுலேஷன் பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகளின் ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு பேரணி சிவகாசி அருகே உள்ள மேலத்தாயில்பட்டி பஸ் நிறுத்தத்தில் தொடங்கி முக்கிய வீதியில் வழியாக ஊர்வலம் நடைபெற்றது.

இன்று ஜூன் 14 குருதிக்கொடை தினத்தை முன்னிட்டு, மனித உயிர்களை காப்பாற்ற அனைவரும் ரத்ததானம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாக கமிட்டியினர் செய்திருந்தனர்.