• Thu. Mar 28th, 2024

குமரியில் போக்குவரத்து காவலர்களுக்கு நிழல் தாங்கியுடன் கூடிய பேரிக்காட்

குமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவில் பகுதியில் நிழல் தாங்கியுடன் கூடிய பேரிக்காட்
போக்குவரத்து ஒழுங்கு பிரிவு ஆய்வாளர் அருண் பார்வையிட்டார்
குமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவில் பகுதி மாநகராட்சியாக மாற்றப்பட்டபின்.சாலைகள் விரிவாக்கம்,நடைபாதைகள் முறையாக செப்பனிடப்பட்டு பாதசாரிகளுக்கு வசதியான நடைபாதையாக மாற்றப்பட்டுள்ளது நகர மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.சாலைகளில் போக்குவரத்தை முறைப்படுத்த.வடசேரி சந்திப்பு,சவோரியார் கோவில் சந்திப்பு மற்றும் ஈத்தாமொழி பிரிவு சந்திப்பு உட்பட எட்டு இடங்களில்.போக்குவரத்து காவலர்களுக்கு நிழல் தாங்கியுடன் கூடிய பேரிக்காட் அமைக்கப்பட்டுள்ளது. இதனை போக்குவரத்து ஒழுங்கு பிரிவு ஆய்வாளர் அருண் பார்வையிட்டார் உடன் போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளர் செல்லசாமி சுமித் ஆல்வின் மோகன் மற்றும் காவலர்கள் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *