அயலி என்கிற பெண் தெய்வத்தை வணங்கும் ஊர்மக்கள், பெண்பிள்ளைகள் பருவமெய்தியதும் வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது என்றும் உடனடியாகத் திருமணம் செய்துவிட வேண்டுமென்றும் கட்டுப்பாடு வைத்திருக்கிறார்கள்.
பல நூறு ஆண்டுகளாகத் தொடரும் அந்தப்பழக்கத்தால் பள்ளி இடைநிற்றல், சிறு வயது திருமணங்கள் அதனால் பல பாதிப்புகள் ஆகியனவற்றை அந்த ஊர்ப் பெண்கள் சந்திக்கிறார்கள்.
1990 இல் அந்த ஊரில் இருந்து பள்ளிக்குச் செல்லும் தமிழ்ச்செல்வி என்கிற மாணவிக்குள் பல கேள்விகள்.அவற்றிற்குத் துணிச்சலான செயல்கள் மூலம் விடை கண்டறிவதுதான் அயலி இணையத் தொடர்.சிறுதெய்வ வழிபாடுகள் எப்படித் தோன்றின? அவை எவ்வாறு தொடர்கின்றன? என்பன குறித்தெல்லாம் விளக்கமாகச் சொல்லிவிட்டுக் கதைக்குள் செல்கிறார்கள். அதனால் ஒவ்வொரு காட்சியையும் ரசித்துப் பார்க்க முடிகிறது.
தமிழ்ச்செல்வியாக நடித்திருக்கும் அபிநட்சத்திரா, அவருடைய அம்மாவாக வரும் அனுமோல் ஆகிய இருவரும் தங்கள் சிறந்த நடிப்பால் தொடர் வேகமாகச் செல்ல உதவுகிறார்கள்.
அலட்சியப் புன்னகையுடன் ஒவ்வொரு கல்லாகத் தக்ர்த்தெறியும் அபியும், மிகப்பெரிய விசயத்தை அநாயசமாக மறைக்கும் மகளைப் பார்த்து வியந்து ரசிக்கும் அனுமோலும் பல இடங்களில் கைதட்டல் பெறுகிறார்கள்.
தலைமையாசிரியராக நடித்திருக்கும் காயத்ரி, உதவி தலைமையாசிரியாக நடித்திருக்கும் டிஎஸ்ஆர் ஆகிய இருவரின் பாத்திரப்படைப்புகள் பழமைக்கும் புதுமைக்கும் இடையிலான மோதல்களைச் சரியாகச் சித்தரிக்கின்றன.
தமிழ்ச்செல்வியின் அப்பா அருவிமதன், வில்லன் லிங்கா, அவருடைய அப்பா சிங்கம்புலி ஆகியோரும் நன்று.ஒரேகாட்சியில் வந்தாலும் மிடுக்குடன் வந்து போகிறார் லட்சுமிபிரியா.
ஊர்ப்பஞ்சாயத்துக்காட்சியில் பிரகதீஸ்வரன், செருப்பை ஓங்கி தரையில் அடிக்கும் காட்சி சிரிப்பு மழையுடன் கூடிய செருப்படி.
ரேவாவின் இசையில் பாடல்கள் கதைக்களத்தோடு ஒன்றியிருக்கின்றன. பின்னணி இசை தொடரின் கருத்துகளை மேம்படுத்திக் காட்ட உதவுகிறது.
ராம்ஜியின் ஒளிப்பதிவில் கிராம மக்கள் அவர்களுடைய பழக்க வழக்கங்கள் ஆகியன அச்சு அசலாகப் பதிவாகியிருக்கின்றன.
எழுதி இயக்கியிருக்கும் முத்துக்குமார், சமுதாயத்துக்குத் தேவையான கருத்தை சுவாரசியமான திரைக்கதையில் சொல்லியிருக்கிறார். வசனங்கள் மிகவும் கூர்மையாக இருக்கின்றன.மையக்கருத்தைக் காட்டிலும் கதாபாத்திரங்கள் மற்றும் காட்சியமைப்புகள் முற்காலத் தமிழ்நாட்டு வாழ்வியலைச் சொல்லிச் செல்கின்றன.
ஜீ 5 இணையத்தில் எட்டு பாகங்களாக இருக்கும் இந்தத் தொடர் தமிழ்ச்சமுதாயத்தை உலகத்துக்கு அறிமுகப்படுத்தும் ஆவணமாக அமைந்துள்ளது.
- ஈரோடு கிழக்கு தொகுதி: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்புஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. இ.பி.எஸ். – ஓ.பி.எஸ் அணிகள் தவிர மற்ற அரசியல் […]
- தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஈரோடு மாநகர் மாவட்டம் புதிய நிர்வாகிகள் அறிவிப்புதே.மு.தி.க. ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளரும் ஈரோடு கிழக்கு தொகுதி தே.மு.தி.க. வேட்பாளருமான எஸ்.ஆனந்த் வெளியிட்டுள்ள […]
- இன்று கொடியேற்றத்துடன் பழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா தொடங்கியதுபழனியில் தைப்பூசத் திருவிழா வெகுவிமரிசையாக இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனியில் […]
- ‘பிபிசி’ ஆவணப் பட சர்ச்சை-பாராளுமன்றத்தில் குரல் எழுப்ப திமுக எம்பிகள் முடிவுபாராளுமன்ற பட்ஜெட் கூட்டதொடர் தொடங்க இருப்பதையொட்டி தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை […]
- சுற்றுலா வந்த கேரளா வாகனம் விபத்துநீலகிரி மாவட்டம் மஞ்சூர் சாம்ராஜ் பகுதியில் கேரளாவில் இருந்து சுற்றுலா வந்த நான்கு நபர்கள் KL53 […]
- ஒடிசா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மீது துப்பாக்கிச்சூடுஒடிசா மாநிலத்தில் . பிஜு ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரான அவர் இன்று மதியம் […]
- வானில் ஒரு அரிய நிகழ்வு.. பூமி அருகே வரும் வால் நட்சத்திரம்50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு மிக அரிய நிகழ்வாக பூமிக்கு அருகே வால் நட்சத்திரம் வருகிறது. […]
- கூடலூர் அருகே பேருந்து சக்கரத்தில் சிக்கி ஒருவர் பலிநீலகிரி மாவட்டம் கூடலூர் தேவாலப் பகுதியில் அரசு பேருந்து சென்ற போது கேத்தன் (53) என்பவர் […]
- நீலகிரி மாவட்டம் ஓவேலியில் யானை தாக்கியதில் மேலும் ஒருவர் பலி நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓவேலி அருகில் யானை தாக்கியதில் மேலும் ஒருவர் பலியானதால்பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.நீலகிரி […]
- அனைத்து இடங்களிலும் தமிழை கொண்டு செல்லும் அரசாக திமுக அரசு திகழ்கிறது- முதல்வர் பேச்சுநிர்வாகத்தில் தமிழ், கோயில்களில் தமிழ், நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தமிழை கொண்டு செல்லும் […]
- கார்- சரக்கு ஆட்டோ விபத்து ..5 பேர் காயம்உதகையில் சுமார் 10 அடி பள்ளத்தில் சரக்கு ஆட்டோ மற்றும் கார் கவிழ்ந்து விபத்துஏற்பட்டத்தில் 5 […]
- தாய்ப்பால் தானம் வழங்கிய ஸ்ரீவித்யா பைரவிற்கு பாராட்டுயாதும் கோவை மற்றும் புதிய பாதை அமைப்பினர் இணைந்து 10 மாதங்களில் 135 லிட்டர் தாய்ப்பால் […]
- வாயில் கருப்பு துணி கட்டி வழக்கறிஞர்கள் போராட்டம்உதகையில் வாயில் கருப்பு துணி கட்டி தொடரும் வழக்கறிஞர்கள் போராட்டம்… நீலகிரி மாவட்டம் உதகையில் மாவட்ட […]
- குன்னூரில் இலவச மருத்துவ சிகிச்சை முகாம்தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவின் பேரில்நீலகிரி மாவட்ட கழகச் செயலாளர் பா.மு. முபாரக் ஆலோசனையின் […]
- ஈரோடு தேர்தல் தமிழ்நாட்டில் ஒருமாற்றத்தை உருவாக்கி காட்டும்-செங்கோட்டையன்தமிழ்நாட்டில் இந்த தேர்தல் ஒரு மாற்றத்தை உருவாக்கி காட்டும் எனஅ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று […]