• Thu. Dec 18th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

புதிய மின் மாற்றி திறந்து வைத்த அரவிந்த் ரமேஷ்..,

ByE.Sathyamurthy

May 30, 2025

செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதி புனித தோமையார் மலை ஒன்றியம் கோவிலம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட ராஜேஸ்வரி நகர் மற்றும் அண்ணா நகர் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று ரூபாய் 7.5 லட்சம் செலவில் புதிய மின் மாற்றி மக்கள் பயன்பாட்டிற்கு சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ச. அரவிந்த் ரமேஷ் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் புனித தோமையர் மலை தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் கோவிலம்பாக்கம் ஜி. வெங்கடேசன், ஒன்றிய பெருந்தலைவர் சங்கீதா பாரதிராஜன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஜெ.இ.பாண்டியன், மாவட்ட கவுன்சில் என்.வேதகிரி,வார்டு கவுன்சிலர்கள் சொக்கலிங்கம், விஜயகுமார்,மாதவன்,ஒன்றிய துணை அமைப்பாளர் E.விஜய், மற்றும் மின்சார வாரிய அதிகாரிகள், கழக நிர்வாகிகள், பொதுமக்கள்என பலர் கலந்து கொண்டனர்.