திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி கோவிலூர் ஊராட்சி பண்ணைக்குளம் மற்றும் கோ.ராமநாதபுரம் ஆகிய ஊர்களை சேர்ந்த அதிமுக, பாஜக, தவெக ஆகிய கட்சிகளை சேர்ந்த 33 பேர் அக்கட்சிகள் இருந்து விலகி வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் வீரா எஸ்.டி.சாமிநாதனுக்கு சால்வை அணிவித்து தங்களை திமுக உறுப்பினர்களாக இணைந்து கொண்டனர்.

அப்போது உடன் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர்உடன் இருந்தனர்.





