• Tue. May 7th, 2024

தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு மின்கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம்..!

Byவிஷா

Dec 7, 2023

தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களுக்கு மின்கட்டணம் செலுத்த தமிழக அரசு கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது.
தமிழகத்தில் மின் கட்டணம் 2 மாதங்களுக்கு ஒருமுறை கணக்கீடு செய்து தமிழ்நாடு மின்சார வாரியம் வசூல் செய்து வருகிறது. அதன்படி பயனர்கள் தாங்கள் பயன்படுத்திய மின்சாரத்திற்கு ஏற்ப கட்டணங்களை நேரடியாகவோ, ஆன்லைன் வாயிலாகவோ செலுத்தி வருகின்றனர். 2 மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் செலுத்தப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டின் கடைசி மாதமான டிசம்பரில் மின்கட்டணம் செலுத்த வேண்டும். இந்த நிலையில் மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் அதிக பாதிப்பை சந்தித்துள்ளன. பல இடங்களில் வெள்ள நீர் வடியாததால் மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். அதிலும் புயல் காற்றினால் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்துள்ளதால் பல இடங்களில் கடந்த 3 நாட்களுக்கும் மேலாக மின்சாரம் வழங்கப்படாமல் உள்ளது.
மின்சார வாரியமும் கடுமையான நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. இந்த நிலையில் புயல் பாதித்த 4 மாவட்டங்களுக்கு மட்டும் மின் கட்டணம் செலுத்துவதில் தமிழக அரசு கூடுதல் அவகாசம் அளித்துள்ளது. அதாவது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் மின் கட்டணம் செலுத்த டிசம்பர் 18ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *