நடிகை ஜூஹி சாவ்லாவுக்கு விதிக்கப்பட்டிருந்த 20 லட்சம் ரூபாய் அபராதம், தற்போது 2 லட்சம் ரூபாயாக குறைப்பட்டுள்ளது. 5-ஜி தொழில் நுட்பம் அமலுக்கு வருவதற்கு முன்பு “அந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டால் பறவைகள் மற்றும் உயிரினங்களுக்கு அபாயம் ஏற்படும். இதனால் அத்திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்” என்று சொல்லி நடிகை ஜூஹி சாவ்லா உள்ளிட்ட பலர் கடந்த ஜூன் மாதம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி, இது முற்றிலும் தவறான தகவல். நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் செயல். வெறும் பெயருக்காகவும், புகழுக்காகவும்தான் இந்த வழக்கினை மனுதாரர்கள் தாக்கல் செய்திருக்கிறார்கள்… என்று சொல்லி வழக்கு தொடர்ந்த நடிகை ஜூஹி சாவ்லாவிற்கு 20 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார். இந்த வழக்கில் நடிகை ஜூஹி சாவ்லா டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார்.
இந்த வழக்கினை வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக விசாரித்த நீதிபதி இந்த 5-ஜி தொழில் நுட்பம் அற்பமான விஷயம் இல்லை. சாதாரணமான முறையில் இதனை உருவாக்கவில்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும்…” என்று அறிவுறுத்தி ஜூஹி சாவ்லாவுக்கு விதிக்கப்பட்டிருந்த 20 லட்சம் ரூபாய் அபராதத் தொகையை 2 லட்சம் ரூபாயாகக் குறைத்து உத்தரவிட்டது.
இந்தத் தீர்ப்பினை கேட்டு மகிழ்ச்சியடைந்த நடிகை ஜூஹி சாவ்லா இது குறித்து தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார். தனக்கான அபராதத் தொகையைக் குறைத்து உத்தரவிட்டதால் நீதிபதிக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்தத் தீர்ப்பு குறித்து நடிகை ஜூஹி சாவ்லா பேசும்போது, முதல் தீர்ப்பு வந்தபோதே அதை எதிர்த்து அப்பீல் செய்யும்படி எனது குடும்பத்தினர் என்னைக் கேட்டுக் கொண்டார்கள். காற்றில் இருக்கும் மின் காந்த அலைகளைப் பற்றி நான் கடந்த 2010-ம் ஆண்டில் இருந்தே படித்து வருகிறேன்.
என்னுடைய பின்னணி மற்றும் என்னுடைய சமூக சேவைகள் எதையுமே நீதிமன்றம் முதலில் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. புறக்கணித்தது. இதனை சாதாரண ஒன்றாகவே அனைவரும் கருதினார்கள்.
பத்திரிகைகள் இதனை முக்கியப் பிரச்சினையாக உருமாற்றிக் காண்பித்தமைக்கு எனது நன்றிகள். என்றார் நடிகை ஜூஹி சாவ்லா.
- தமிழ்நாடு பயணம் மறக்க முடியாத ஒன்று… மோடி ட்விட்…தமிழகத்தில் 36 ஆயிரம் கோடி மதிப்பிலான மத்திய அரசின் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று […]
- லடாக் வாகனவிபத்தில் ராணுவ வீரர்கள் 7 பேர் பலிலாடக் பகுதியில் நிகழ்ந்த வாகனவிபத்தில் ராணுவ வீரர்கள் சென்று வாகனம் சிக்கி 7பேர் பலியாகியுள்ளனர்.லடாக்கின் துர்துக் […]
- 4 மாவட்டங்களில் கொரோனா அதிகரிப்புஉலக முழுவதும் கொரோனா தொற்று ஏற்றம் இறக்கம்த்தோடு காண்ப்படுகிறது. இந்தியாவில் 2000க்குள் இருந்த தொற்று எண்ணிக்கை […]
- நாளையுடன் விடை பெறுகிறது ‘அக்னி’..வெயில்இந்த ஆண்டுக்கான அக்னி வெயில் நாளையுடன் முடிவுக்குவருகிறது. தமிழகத்தில், கோடையின் உச்சகட்ட வெயிலான அக்னி நட்சத்திரம் […]
- போதைப்பொருள் வழக்கில் ஷாருக் கான் மகன் விடுவிப்பு..!பாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மகன் போதைபொருள் வழக்கில் கைது செய்யப்பட்டார்.தற்போது போதிய ஆதாரம் […]
- ஹெல்மெட் அணியாவிட்டால் 2000 ரூபாய் அபராதம் என்பது ஏற்கத்தக்கதல்லஇருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும் அப்படி ஹெல்மெட் அணியாவிட்டால் 2000 […]
- மீண்டும் பிகில் ராயப்பன் என்ட்ரியா..?? அட்லி சொன்ன பதில்..தமிழ் சினிமாவில் வெளியான ராஜா ராணி படம் மூலம் அட்லி இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு […]
- பான் மசாலா விளம்பரங்களில் நடிக்க வேண்டாம்… ஷாருக்கான், அஜய்தேவ்கனுக்கு கடிதம் எழுதிய ரசிகை..பான்மசாலா விளம்பரங்களில் நடிப்பது தொடர்பாக முன்னணி இந்தி நடிகர்கள் மீது சமீப காலங்களாக கடுமையான விமர்சனங்கள் […]
- லெஜண்ட் படத்தின் ஆடியோ லான்ச்… 10 முன்னனி நடிகைகள் அழைப்பு…லெஜண்ட் சரவணன் நடிக்கும் முதல் படத்துக்காக 10 முன்னணி நடிகைகள் கலந்துகொள்ள உள்ளதைப் பார்த்து கோலிவுட்டே […]
- 10,12ம் வகுப்பு படித்திருந்தால் போதும் மத்திய அரசு வேலை ரெடிஅரசு வேலை என்றாலே சந்தோசம் அதிலும் மத்திய அரசு வேலை என்றால் சொல்லவா வேண்டும்.. மத்திய […]
- பிளஸ்1 படிக்கும் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலைதமிழக்ததை சேர்ந்த இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலைகிடைத்துள்ளது.தமிழகத்தை சேர்ந்த விஸ்வநாதன் […]
- புகையிலை பொருட்களுக்கு மேலும் ஓராண்டு தடைஇளைஞர்களின் உடல்நலன் மற்றும் வாழ்க்கையை பாதிக்கும் குட்கா,பான்மசாலா உள்ளிட்ட பொருட்களுக்கு மேலும் ஒராண்டுதடைவிதித்து தமிழக அரசு […]
- பள்ளி குறித்த திட்டங்களுக்கு தமிழில் பெயர்… முதல்வர் பேச்சுதமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பல்வேறு நல்ல திட்டங்களை […]
- யோகி ஆதித்யநாத்தை விமர்சித்த சிறுவனுக்கு நூதுன தண்டனை..உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை விமர்சிக்கும் விதமாக சமூக வலைத்தளங்களில் படத்தை பகிர்ந்த 17 வயது […]
- ஸ்டாலினின் மோசமான நடத்தையை கண்டு வெட்கி தலைகுனிகிறேன் -அண்ணாமலை டூவிட்பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.சென்னை […]