கிச்சனில் கொதித்து கொண்டிருந்த சாம்பார் சட்டியை எடுத்து வந்து, கணவன் கண்ணெதிரே, மனைவியின் மீது ஊற்றிவிட்டனர் கொடூரர்கள்..
அது மட்டுமல்ல, அந்த சாம்பார் சட்டியாலேயே மனைவியை போட்டு தாறுமாறாக தாக்கியும் உள்ளனர்.. இதற்கான காரணம் என்னன்னு பாருங்க..!
நாடு முழுவதும் சமீப காலமாகவே மதமாற்றம் செய்யப்படுவது நடந்து வருகிறது.. கட்டாயத்தின் பேரில் விருப்பமில்லாதவர்களை, மதமாற்றம் செய்யும் முயற்சியால் ஏராளமான வன்முறைகளும் நிகழ்கின்றன.. இதனால் அப்பாவிகள் பலரும் உயிரையே இழக்க நேரிடுகிறது.
கர்நாடக மாநிலமும் இதற்கு விதிவிலக்கல்ல.. மதமாற்ற விவகாரங்கள் இங்கும் தலைவிரித்தாடி கொண்டிருக்கின்றன. கட்டாய மதமாற்ற தடை சட்ட மசோதாவை விரைவில் கர்நாடக சட்டமன்றத்தில் தாக்கல் செய்து, அதை சட்டமாக்க இருப்பதாக அறிவிப்பும் வெளியாகி விட்டது.. ஆனாலும், படுபயங்கரமான செயல் ஒன்று அங்கு நடந்துள்ளது.. கடந்த வாரம் மதமாற்றத்தில் ஈடுபடுவதாக சொல்லி, பெண்கள் உள்ளிட்ட மதபோதகரின் குடும்ப உறுப்பினர்கள் தாக்கப்பட்டுள்ளனர்… பெலாகவி மாவட்டத்தில் துக்கனட்டி என்ற கிராமம் உள்ளது..
இங்கு வசித்து வருபவர் அக்ஷய்குமார் கரகன்வி.. இவர் ஒரு மதபோதகர்.. தலித் சமூகத்தை சேர்ந்தவர்.. கடந்த டிசம்பர் 29ம் தேதியன்று இவர் வீட்டில் மதியம் 1 மணிக்கு பிரார்த்தனை கூட்டம் நடந்து கொண்டிருந்தது.. பிரார்த்தனை முடிந்ததும் சாப்பிடுவதற்காக சாப்பாடும் கிச்சனில் தயாராகி கொண்டிருந்தது. அப்போது, வலதுசாரி ஆதரவாளர்கள் 7 பேர் அங்கு திடுதிப்பென்று அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.. பிரார்த்தனை கூட்டத்தை உடனே நிறுத்துமாறு சொல்லி உள்ளனர்.. அக்ஷய்குமார், அந்த கிராமத்தினரை கிறிஸ்தவ மதமாற்றம் செய்வதாக சொல்கிறாராம்… அந்த ஆத்திரத்தில்தான், அவரையும், குடும்பத்தினரையும் வலதுசாரி ஆதரவாளர்கள் அடித்து தாக்குதலில் ஈடுபட்டனர்… மேலும் வாய்க்கு வந்ததையெல்லாம் அக்ஷய்குமார் குடும்பத்தினரை பார்த்து திட்டிவிட்டு போனார்கள்.. ஆபாசமாக வசைபாடினார்கள்..
அப்போதும் அவர்களுக்கு ஆத்திரம் அடங்கவில்லை.. நேராக கிச்சனுக்கு போய் அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த சாம்பார் சட்டியை எடுத்து வந்து, அக்ஷய்குமார் மனைவி பாரதி மீது கொதிக்க கொதிக்க ஊற்றினார்கள்.. இதனால் வலி பொறுக்க முடியாமல் பாரதி கதறி துடித்தார்.. அப்போதும் அவர்களுக்கு ஆத்திரம் அடங்கவில்லை.. அந்த சாம்பார் சட்டியை கொண்டு பாரதியின் காலில் வலுவாக தாக்கினார்கள்.. இதனால் பாரதிக்கு உடம்பு வெந்துபோய் தீக்காயம் ஏற்பட்டது.. இந்த தாக்குதல் 3 பெண்கள் உள்ளிட்ட குடும்பத்தினர் 5 பேர் மீது நடத்தப்பட்டுள்ளது.. அதற்கு பிறகுதான் அந்த கும்பல் அங்கிருந்து வெளியேறியது.. இந்த சம்பவம் குறித்து காதாபிரபா போலீஸில் புகார் தரப்பட்டது.. மொத்தம் 7 பேர் தாக்குதலில் ஈடுபட்டதாக புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இதையடுத்து சம்பந்தப்பட்ட அந்த 7 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணையை நடத்தி வருகிறார்கள்.
- போலி 500 நோட்டுகள் எண்ணிக்கை அதிகரிப்பு – ரிசர்வ் வங்கி எச்சரிக்கை!போலி 500 நோட்டுகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ரிசர்வ் வங்கி தகவல் பொதுமக்கள் கவனமாக இருக்க […]
- தமிழக அரசினுடைய அனுமதி பெறாமல் மேகதாது அணை கட்ட முடியாது -ஓபிஎஸ்அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஒ பன்னீர் செல்வம் சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்அப்போது […]
- மெட்ரோ குடிநீர் லாரிகள் திடீர் ஸ்டிரைக்.. ஸ்தம்பித்தது சென்னைமெட்ரோ குடிநீர் லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தால் கோடம்பாக்கம், தி.நகர், ஆர்.ஏ.புரம், மந்தைவெளி, கிரீன்வேஸ் சாலை, […]
- மதுரை விமான நிலைய சாலையில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிப்புஅவனியாபுரம் ஜேஜே நகர் பகுதியில் சாலை,சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி 100க்கும் […]
- மல்யுத்த வீராங்கனை போராட்டம் குறித்து மதுரையில் அண்ணாமலை பேட்டிதமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையிலிருந்து இண்டிகோ மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார் மதுரை […]
- சதுரகிரிமலையில் நாளை முதல் 4 நாட்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிவைகாசி விசாகம் மற்றும் வைகாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு நாளை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு […]
- பொன்னியின் செல்வன் படம் வந்ததால செங்கோல் தந்ததாக கூறி ஏமாற்ற பார்க்கிறார்கள் – என்.ராம்அதிகார மாற்றத்துக்காக செங்கோல் தந்ததாக கூறுவது கட்டுக்கதை என்று மூத்த பத்திரிகையாளர் என்.ராம் தெரிவித்துள்ளார். செங்கோல் […]
- ஏற்காடு மலைப்பாதையில் 20 அடி ஆழத்தில் விழுந்து விபத்தில் சிக்கியர் மீட்பு!..சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் நேற்று இரவு பயணித்தவர் 20 அடி ஆழத்தில் விழுந்து விபத்தில் […]
- சாராயத்தை உரமாக பயன்படுத்தும் விவசாயிகள்மத்திய பிரதேசத்தின் பல்வேறு கிராமங்களில் அதிக விளைச்சலுக்காக மதுவை தண்ணீரில் கலந்து பருப்பு பயிர்களின் மீது […]
- இன்று முதல் மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்பிளஸ் தேர்வில் மறுகூட்டல் மறுமதிப்பூட்டுக்கு விண்ணபிக்கும் மாணவர்கள் இன்று முதல் விண்ணபிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பிளஸ் 2 […]
- 3 கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!..திருச்சி, தருமபுரி மற்றும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைகளின் அங்கீகாரம் அண்மையில் ரத்து செய்யப்பட்டது. இது […]
- சாதாரண குடிமகனை விண்வெளிக்கு அனுப்பிய சீனாதனது சொந்த முயற்சியில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி உள்ள 3-வது நாடு சீனா ஆகும். தற்போது […]
- செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சிமுன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் மலர் கண்காட்சி நடைபெறுகிறது.சென்னையில் 2ம் ஆண்டாக செம்மொழி […]
- 150 வயது வரை யாராவது வாழமுடியுமா?” – சரத்குமார் பதில்..!யாராவது 150 ஆண்டுகள் வாழ முடியுமா தனது பேச்சுக்கு சரத்குமார் புதிய விளக்கம் அளித்துள்ளார்.மதுரையில் நடைபெற்ற […]
- 500 மதுபானக் கடைகள் மூடல் – ஜுன் 3ல் அறிவிப்புதமிழகத்தில் 500 மதுக்கடைகளை மூடுவது குறித்த அறிவிப்பு ஜூன்3ல் வெளியாக உள்ளது. கலைஞர் பிறந்தநாள் நூற்றாண்டு […]