மதுரை விளாச்சேரி அருகே மொட்டைமலை பகுதியை சேர்ந்தவர் தவசி தேவர் இவரது மகன் பரமன் ( வயது 40) இவருக்கு சுபா என்ற மனைவியும் 7 வயதில் இரட்டைக் குழந்தைகள் உள்ளனர்.
இதே பகுதியில் இவரது வீட்டின் அருகே வசித்து வரும் தூரத்து உறவினர் கரண் (வயது 27).

பரமன் மற்றும் கரன் இடையே ஏற்கனவே சொத்து தகராறு உள்ளது.
இந்நிலையில் பரமன் மாடு வளர்த்து வருவதால் மாட்டின் மூலம் கழிவு நீர் மற்றும் கொசுக்கள் வந்து தொல்லை செய்வதாக அடிக்கடி சண்டை போட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு ஏற்பட்ட தகராறில் கரண் பரமனை அறிவாளால் வெட்டியதில் சம்பவ இடத்திலேயே பரமன் உயிரிழந்தார் .

இது குறித்து திருநகர் போலீசாரிடம் பரமனின் மனைவி சுபா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் சம்பவ இடத்தில் இறந்த பரமனின் உடலை உடற்கூறு ஆய்விற்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கொலை செய்து தலைமறைவாக உள்ள கரணை திருநகர் போலீஸார் தேடி வருகின்றனர்.