• Thu. Apr 25th, 2024

செஸ் வீரர்களை வரவேற்கும் விதமாக தமிழ்நாட்டு கலைஞர்களின் பிரம்மாண்ட நிகழ்வு…

Byகாயத்ரி

Jul 28, 2022

பல நாடுகள் ஏற்க இருந்த இந்த மாபெரும் செஸ் ஒலிம்பியாட் போட்டி முதன்முதலில் தமிழகத்தில் நடைபெற இருக்கும் வேலையில் தமிழகமே அசந்து நிற்கும் அளவிற்கு அதன் பணிகளை சீராக செய்துள்ளது நம் தமிழக அரசு. 187 நாடுகளில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செஸ் வீரர்கள் இப்போட்டியில் கலந்துக்கொள்ள இருக்கும் நேரத்தில் எல்லா நாடுகளையும் திரும்பி பார்க்க வைக்க காத்திருக்கிறது இந்த செய் ஒலிம்பியாட் போட்டி. அதனை மேலும் சிறப்பிக்கும் வகையில் நம் தமிழ்நாட்டின் பாரம்பரிய கலை சார்ந்த கலைஞர்களை வைத்து செஸ் போர்டில் ஒரு அட்டகாசமான நிகழ்வை நிகழ்த்தியுள்ளார்கள் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம். இந்த வீடியோ தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *