

தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் தனியாருக்கு நிகராக செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசு மருத்துவமனைகளில் ஒன்றான இந்த அரசு மருத்துவமனையானது, தென்காசி மாவட்டம், செங்கோட்டை நகர பகுதியில் இருந்து குண்டாறு செல்லும் சாலையில் உள்ளது. இந்த அரசு மருத்துவமனைகளில் கட்டிடங்கள் கேரள கலை நுட்பத்துடன் இருக்கும் சூழலில், அந்த கட்டிடங்கள் அனைத்தும் சில வருடங்களுக்கு முன்பு மிகவும் மோசமான நிலையிலேயே காணப்பட்டன. இந்த நிலையில், அந்த மருத்துவமனைக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு தலைமை மருத்துவராக பொறுப்பேற்ற ராஜேஷ் கண்ணா என்பவர் மருத்துவமனையை இந்தியாவிலேயே சிறந்த மருத்துவமனையாக உயர்த்த வேண்டும் என்ற நோக்குடன் பல்வேறு தன்னார்வலர்களை அணுகி அரசு மருத்துவமனையின் தேவைகள் குறித்து எடுத்துரைத்து பல தன்னார்வலர்களின் உதவிகளைப் பெற்று தற்போது செங்கோட்டை அரசு மருத்துவமனையில் இல்லாத அடிப்படை வசதிகளே இல்லை என்று கூறும் அளவிற்கு சிறந்த மருத்துவமனையாக தரம் உயர்த்தியுள்ளார்.
அது மட்டும் இல்லாமல் மருத்துவமனை வளாகத்திலேயே மூலிகை பூங்காக்கள், சுற்றுச்சூழல் பூங்காக்கள் உள்ளிட்ட பூங்காக்களை அமைத்து மூலிகை பூங்காக்களில் உள்ள அரியவகை மூலிகை செடிகளை சித்த மருத்துவத்திற்கு பயன்படுத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குதல். மேலும், சிறுவர், சிறுமிகள் விளையாண்டு மகிழ பூங்காக்கள், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் தங்களது பொழுதை கழிப்பதற்காக மருத்துவமனை வளாகத்திலேயே நூலகம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வசதிகளை செய்து, தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக இந்த அரசு மருத்துவமனையானது தற்போது செயல்பட்டு வருகிறது.
மேலும், கடந்த 2021 மற்றும் 22 ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் இந்திய மருத்துவ குழுவினர் ஆய்வு செய்து பல்வேறு விருதுகளை வழங்கினர். அந்த வகையில், நாட்டிலே சிறந்த மருத்துவமனைக்கான விருதை இந்த செங்கோட்டை அரசு மருத்துவமனை பெற்றது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தற்போது இந்த மருத்துவமனையில், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு நிகராக பல்வேறு சிறப்பு அறுவை சிகிச்சைகள் மற்றும் நுணுக்கமான அறுவை சிகிச்சைகளை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்து வருகின்றனர்.
- விரைவில் திருநெல்வேலிக்கு வந்தேபாரத் ரயில் சேவை தொடக்கம்..!நாட்டின் முக்கிய வழித்தடங்களை இணைக்கும் வந்தேபாரத் ரயில் சேவை விரைவில் திருநெல்வேலிக்கு தொடங்கப்படும் என ரயில்வே […]
- உணவு தர பட்டியலில் தமிழ்நாட்டுக்கு எத்தனையாவது இடம்..?மத்திய அரசு வெளியிட்டுள்ள உணவு தர பட்டியலில் தமிழ்நாட்டுக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது.மத்திய அரசு உணவு […]
- முகநூலில் பரவும் புது மோசடி..!மக்களின் கைகளில் ஸ்மார்ட்போன் என்பது தவிர்க்க முடியாத நிலையில் உருவாகி இருக்கிறது. அதில் பேஸ்புக், வாட்ஸப் […]
- கேரளாவில் – 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கைகேரளாவில் அதிக மழை பொழிவுக்கு வாய்ப்பு உள்ள 8 மாவட்டங்களில் பேரிடர் மீட்பு துறையினர் உஷார் […]
- ஜூன் 12 பள்ளிகள் திறப்பு : 1500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!தமிழகத்தில் வருகிற ஜூன் 12ஆம் தேதியன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் […]
- நடிகை ரோஜா மருத்துவமனையில் அனுமதி..!ஆந்திரா மாநில அமைச்சரும், பிரபல திரைப்பட நடிகையுமான ரோஜா செல்வமணி, கால் வீக்கம் காரணமாக சென்னை […]
- யூடியூப் சேனல் போல் வாட்ஸ்அப் சேனல்மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் உலகம் முழுவதும் ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப […]
- கொலம்பியா விமான விபத்து; 40 நாட்களுக்கு பின் 4 குழந்தைகள் உயிருடன் மீண்ட அதிசயம்கொலம்பியா நாட்டில் கடந்த மே மாதம் 1-ந்தேதி ஒற்றை என்ஜின் கொண்ட சிறிய ரக விமானம் […]
- நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் சூப்பர் வேலை..!நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் (NLC India Limited – NLCIL), ஒரு முதன்மையான நவ்ரத்னா […]
- விமானம் – திரைவிமர்சனம்சமுதாயத்தில் உயர்தட்டில் இருக்கும் மக்களுக்கு அன்றாட சலிப்பூட்டும் சில செயல்கள் அடித்தட்டு மக்களின் வாழ்நாள் கனவாக […]
- பெல்- திரைவிமர்சனம்பழந்தமிழர் மருத்துவத்தில் சிறந்து விளங்கிய அகத்தியரின் இரகசிய மருத்துவக்குறிப்புகள் இருக்கின்றன என்கிற சொல்லுக்குத் திரைவடிவம் கொடுத்திருக்கும் […]
- இனி சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்த திட்டம்கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் வரும் கல்வி ஆண்டில் ஒரு பாடத்திற்கு 4 […]
- சோழவந்தான் அருகே ஆண்டி பட்ட சாமி கோவிலில் வருடாபிஷேக விழாமதுரை மாவட்டம்.சோழவந்தான் அருகே காடுபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வடகாடுபட்டி கிராமத்தில் உள்ள ஆண்டி, பட்டச்சாமி கோயிலில் […]
- ராஜபாளையம் அருகே நிழல்குடை அமைக்க பூமிபூஜைராஜபாளையம் அருகே சாத்தூர் சட்டமன்ற தொகுதி உட்பட்ட ஆறு கிராமங்களில் 88 லட்ச ரூபாய் மதிப்பிலான […]
- தமிழ்நாட்டில் ஒரு தாஜ்மஹால்திருவாரூர் அருகே அம்மையப்பனில், தாயின் நினைவாக ரூ.5 கோடி செலவில் தாஜ்மஹால் போன்ற வடிவமைப்பில் மகன் […]
