• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ஆகாசா ஏர் விமானம்.. பயணிகளின் தகவல்கள் கசிவு..!!

Byகாயத்ரி

Aug 29, 2022

ஆகாசா ஏர் விமான நிறுவனத்தின் பயணிகளின் தனிப்பட்டதகவல்கள் கசிவுவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிதாக தொடங்கப்பட்ட ஆகாசா ஏர் ஆகஸ்ட் 7 ஆம் தேதி தனது செயல்பாட்டைத் தொடங்கியது. ஆகாசா ஏர் நேற்று, தரவு மீறல் காரணமாக, அங்கீகரிக்கப்படாத நபர்கள் பயனர் தகவல்களை அணுகுவதற்கு காரணமாக இருப்பதாகத் தெரிவித்தது. விமான நிறுவனம் தனது வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டதுடன், சம்பவம் குறித்து நோடல் ஏஜென்சியான இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்பு குழுவிற்கு (CERT-In) தானாக புகார் செய்துள்ளதாக கூறியுள்ளது.

“எங்கள் உள்நுழைவு மற்றும் பதிவுபெறுதல் சேவை தொடர்பான தற்காலிக தொழில்நுட்ப உள்ளமைவு பிழை, ஆகஸ்ட் 25, 2022 வியாழன் அன்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது”. இந்த உள்ளமைவுப் பிழையின் விளைவாக, பெயர்கள், பாலினம், மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் ஃபோன் எண்கள் ஆகியவற்றிற்கு மட்டுப்படுத்தப்பட்ட சில பதிவுசெய்யப்பட்ட பயனர் தகவல்கள் அங்கீகரிக்கப்படாத நபர்களால் பார்க்கப்பட்டிருக்கலாம். இந்தச் சூழலைத் தீர்க்க கூடுதல் கட்டுப்பாடுகளைச் சேர்த்ததன் மூலம், எங்கள் உள்நுழைவு மற்றும் பதிவுபெறுதல் சேவைகளை மீண்டும் தொடங்கியுள்ளோம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.