• Thu. May 2nd, 2024

இலங்கை துணை சபாநாயகர் ராஜினாமா ஏற்க மறுப்பு!

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இன்று காலை 10 மணிக்கு இலங்கை நாடாளுமன்றம் கூடுகிறது.

இலங்கையில் நேற்று நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்னதாக துணை சபாநாயகர் ரஞ்சித் ராஜினாமா செய்தார். இந்த நிலையில், இலங்கையில் துணை சபாநாயகர் ரஞ்சித் ராஜினாமாவை ஏற்க அதிபர் கோட்டாபய ராஜபக்ச மறுப்பு தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் கூட்டம் நடப்பதால் துணை சபாநாயகரின் ராஜினாமாவை ஏற்க அதிபர் மறுப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது.

இதனிடையே, இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி, தற்போதைய அரசியல் சூழல் உள்ளிட்டவைகள் பற்றி ஆலோசிக்க நாடாளுமன்றத்தில் இன்றும், நாளையும் விவாதம் நடத்த சபாநாயகர் தலைமையில் நேற்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதன்படி, கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இன்று காலை 10 மணிக்கு இலங்கை நாடாளுமன்றம் கூடுகிறது என்பது குறிப்பிடப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *