• Tue. Apr 30th, 2024

பீகாரில் டீசல் ஆட்டோக்கள், பேருந்துகளுக்கு தடை..

பீகார் மாநிலத்தில் இன்று முதல் டீசலில் இயங்கும் பேருந்துகள் மற்றும் ஆட்டோக்களுக்கு தடை விதிக்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

பாட்னாவில் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில் , கடந்த 2019 ஆம் ஆண்டு டீசலை எரிபொருளாகக் கொண்ட பேருந்துகள் , ஆட்டோக்களை இயக்குவதற்கு தடை விதிக்க அம்மாநில அரசு முடிவெடுத்தது .
ஆனால் , கொரோனா காரணமாக அந்த முடிவு தள்ளிப்போனது . இந்த நிலையில் , இன்று முதல் டீசலில் இயங்கும் பேருந்துகள் மற்றும் ஆட்டோக்களுக்கு தடை விதிப்பதாக அம்மாநிலத்தின் போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

இந்த முடிவால் , தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆட்டோ , பேருந்து ஓட்டுநர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர் . ஆனாலும் மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *