கொடிய நோயில் இருந்து மக்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முறைகளில் அறிவிப்பு கொடுத்து வந்துள்ளனர். வேலூர் மாவட்டம் தனியார் மருத்துவமனை அருகாமையில் உள்ள போக்குவரத்து காவல்துறையின் மூலம் போக்குவரத்து பயணிக்கும் பொதுமக்கள் முகம் கவசம் அணியாமல் செல்வதை அறிந்து அவர்களிடம் முகக் கவசம் அணியாமல் இருந்தால் நோய் பரவும் அபாயம் பற்றி அறிவுறுத்தினர்.பின்னர் முகக்கவசம் அணியாமல் வந்தவர்களிடம் அபராதம் விதிக்கப்பட்டு மேலும் இவ்வாறு முகக்கவசம் இல்லாமல் வாகனத்தை ஓட்டி வரக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது.