பட்டிமன்ற நடுவரும், தமிழறிஞருமான சாலமன் பாப்பையா காலமானார்.
வயது மூப்பு காரணமாக மதுரையில் சாலமன் பாப்பையா காலமானார். அவருக்கு வயது 90

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராக சாலமன் பாப்பையா பணிபுரிந்தவர்.
பட்டிமன்ற நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் சாலமன் பாப்பையா
2021ஆம் ஆண்டு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதை சாலமன் பாப்பையா பெற்றார்.
பாய்ஸ், சிவாஜி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் சாலமன் பாப்பையா நடித்துள்ளார்.
திருக்குறள் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களுக்கு சாலமன் பாப்பையா உரை எழுதியிருக்கிறார்.

2000ஆம் ஆண்டில் தமிழக அரசின் கலைமாமணி விருதினையும் சாலமன் பாப்பையா பெற்றுள்ளார்.








