செப்டம்பர் 1ஆம் தேதி மேட்டூர் அணையை முதல்வர் நேரில் சென்று திறக்கும் விழாவிற்கு தடபுடல் ஏற்பாடு நடைபெற்று வருகிறது .இதற்காக நான்கரை கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விழா ஏற்பாடு நடைபெற்று வருகிறது.
முதல்வருக்கு, பிரதமருக்கு தரும் முக்கியத்துவம்,பாதுகாப்பு போல வழங்க ஏற்பாட்டு நடைபெற்று வருகிறது. விழா மூலம் விவசாயிகளின் பாதுகாவலர் விஜய் என நெகட்டிவ் செட் பண்ண கண்டென்ட்கிரீட்டர்கள் மும்முரமாக தயாராகி வருகிறார்கள்.

ஆனால் டெல்டா மாவட்டங்களில் கள நிலவரம் ,கலவரமாக காட்சியளிக்கிறது. வறட்சி நிவாரணம் கோரி போராட்டம் நடைபெற்று வருகிறது . அணையில் தண்ணீர் திறப்பது சந்தோஷம்தான் என்று எல்லோரும் மேலோட்டமாக பார்த்தால் உண்மையான கள நிலவரம் டெல்டா மாவட்டத்தில் வேறு மாதிரியாக இருக்கிறது.
விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய மேட்டூர் அணை திறப்பு உண்மையில் சந்தோஷம், மகிழ்ச்சி ஏற்படுத்தி இருக்கிறதா? என்றால்
நாம் உறுதியாக சொல்ல முடியாது. ஒவ்வொரு ஆண்டும் குறுவை சாகுபடிக்கு தடையின்றி ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படுவது என்பது நாம் எல்லோரும் அறிந்தது.
இந்த ஆண்டு அணை திறக்க வேண்டிய நாளில் நீர்மட்டம் 79.56 இருந்ததால் அணையை திறக்க வாய்ப்பில்லை. தற்போது அணை நீர்மட்டம் 90.41 அடியாக உயரும் நிலையில், நீர்மட்டம் வரும் நாட்களில் அதிகமாக வரும் என்று உத்தேசித்து டெல்டா பாசன தேவைக்காக நாளை அணையை திறக்க தவெக அரசு முடிவு செய்து ,இதனை தொடர்ந்து முதல்வர் திறந்து வைக்கிறார் .அணையின் நீர்வரத்தை பொறுத்து அடுத்த 45 நாட்கள் தண்ணீர் வழங்கப்படும் என தவெக அரசு அறிவித்துள்ளது .

அணையின் தண்ணீர் 45 நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்றால் அதை கொண்டு முழுமையாக பயிர்களுக்கு பாசனம் செய்வது சாத்தியமில்லை, குறுகிய நெல் நடவுகளுக்கு குறைந்தது 120 நாட்களுக்கும், மத்திய ரக நடவுகள் இருந்தால் சுமார் 140 நாட்கள் தண்ணீர் தேவைப்படும் இது எல்லோருக்கும் தெரிந்தது ஒன்று.
அதேபோல அணையில் நாள் ஒன்றுக்கு வினாடிக்கு பத்தாயிரம் கன அடி தண்ணீர் திறக்க உத்தேசிப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது அவ்வாறு திறந்து விட்டால் தண்ணீர் கடைமடை வரை செல்வது சாத்தியமில்லை, சுமார் 15,000 கன அடி முதல் 18,000 கன அடி வரை தண்ணீர் திறந்தால் தான் கடைமடை விவசாயிகள் பயன்பெற முடியும்
பொதுவாக மேட்டூர் அணை திறக்கும் முன்பாக விவசாயிகள், அதிகாரிகளை வைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்தி குறுவை சாகுபடி முன்னேற்பாடு திட்டங்கள், இடுபொருள் கையிருப்பு, பாசன கால்வாய் சீரமைப்பு ,வேளாண் கடன் மேற்கொள்வது உள்ளிட்ட குறித்து ஆலோசனை செய்வது வழக்கமானது ஒன்று. ஆனால் தவெக அரசு பொறுப்பேற்று இதுவரை ஆலோசனை கூட்டத்தை நடத்தவில்லை.

அதேபோல மேட்டூர் அணை திறப்பு தொடர்பாக எடப்பாடியார் பல்வேறு ஆலோசனை வழங்கினார் அதையும் தவெக அரசு பயன்படுத்தவில்லை, செப்டம்பர் 10ஆம் தேதிக்கு பிறகு திறந்தால் ஒருபோக சாகுபடி முழுமையாக செய்ய முடியம் என்று விவசாயிகள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
மேட்டூர் அணை ஜூன் 12ஆம் தேதி திறப்பதால் டெல்டா மாவட்டத்தில் கடந்தாண்டுகளில் சுமார் 5. 66 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்யப்பட்டது, இந்த ஆண்டு தவெக அரசு பொறுப்பு ஏற்ற பிறகு 3.78 இலட்சமாக சாகுபடி குறைந்துள்ளது .
மேட்டூர் அணையை கடமைக்கு திறக்காமல் கடைமடை வரை தண்ணீர் செல்லும் வகையில் மேட்டூர் அணையை திறக்க முன்வருமா அரசு? என்பதை விவசாயிகள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அடுத்த ஜென்மம் இருந்தால் விவசாயியாக பிறக்க வேண்டும் என்று விஜய் கூறினார் ஆனால் இன்றைக்கு சொல்வது ஒன்று, செய்து ஒன்றாக உள்ளது. பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாமல் இருப்பதால் விவசாயிகள் கண்ணீர் வடிக்கிறார்கள் .
காவேரியில் உரிய நீரை பெற முடியாமல் நாம் தவித்து வருகிறோம், மேகதாது அணை கட்டும் நிலையில் தற்போது இரு மாநில இடையில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகிறது, அதேபோல விவசாயிகள் வறட்சியை சந்தித்து கொண்டு வருகிறார்கள் .
டெல்டா மாவட்டங்களில் இந்த சம்பா சாகுபடியை முழுமை செய்வதற்கு அரசு உரிய ஆலோசனை செய்ய வேண்டும். உரிய காலத்தில் அறிவிப்புகளை கொடுத்து நீர்மட்டத்தை உறுதி செய்து தண்ணீர் திறந்து விட வேண்டும். ரீல்ஸ் தான் எங்களுக்கு முக்கியம் ,விவசாயிகளின் ரியல் எங்களுக்கு முக்கியமில்லை என்று நினைக்கக் கூடாது. லைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விவசாயிகளுக்கும் லைப்க்கும் முக்கியத்துவம் கொடுத்து தவெக அரசு முடிவு எடுக்க வேண்டும் என கூறினார்.




