• Sun. Aug 30th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தொடரும் தீ விபத்து சதி வேலையா? போலீசார் விசாரணை..,

ByKalamegam Viswanathan

Aug 30, 2026

மதுரை மாவட்டம் விளாச்சேரி முனியாண்டி புறம் தென்காள் கண்மாய் பகுதியில் தற்போது தண்ணீர் இன்றி வாடி வருகிறது. இதனால் புற்கள் முள் செடிகளும் அதிக அளவு வளர்ந்து உள்ளது இதில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு வருகிறது.

இன்று அதிகாலை அதிகாலை 2 மணி அளவில் முனியாண்டி புறம் கண்மாய் பகுதியில் பயங்கர அளவிலான தீ முள் மற்றும் காய்ந்த புள்கள் மீது தீ விபத்தானது ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த திருப்பரங்குன்றம் நிலைய அலுவலர் உதயகுமார் தலைவனான தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு வீரர்கள் சுமார் ஒன்றரை மணி நேரம் போராடி தீயை முற்றிலும் அணைத்தனர். மேலும் இந்த மாதத்திலேயே இது மூன்று முறை தீ விபத்து ஆனது நடைபெற்றதாக பகுதி மக்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். கடந்த சனிக்கிழமை இதேபோன்று தீ விபத்து ஏற்பட்டது.

இதை யாரேனும் விஷமிகள் பற்ற வைக்கிறார்களா என தெரியவில்லை என இது குறித்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விற்கின்றனர். தீ விபத்தினால் அப்பகுதியில் குடியிருப்போர் மிகுந்த அச்சத்தில் இருப்பதாகவும் இனிமேல் இதுபோன்ற தீ விபத்து நடக்காத வகையில் காவல்துறை தீவிர ரோந்து பணியை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.