மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நீதிமன்ற வளாகத்தில் அகில பாரத வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஓணம் பண்டிகை வெகுவிமர்சையாக கொண்டாட்டப்பட்டது.,

உசிலம்பட்டி சார்பு நீதிமன்ற நீதிபதி பாரதிராஜா, நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து விழாவை துவக்கி வைத்தனர்.,

பெண் வழக்கறிஞர்கள் அத்தப்பூ கோலமிட்டும், ஓணம் சேலை அணிந்து வந்து உற்சாகமாக கொண்டாடினர்.,

மேலும் 100 க்கும் அதிகமான வழக்கறிஞர்களுக்கும் மலர் கொடுத்தும், இனிப்பு வழங்கியும் தங்கள் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.,




